Skip to main content

அருண் ஜெட்லியின் உடல்நிலை சீராக உள்ளது - வெங்கையா நாயுடு

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

 

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை சீராக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக,  எய்ம்ஸ் மருத்துவமனையில் கேட்டறிந்த துணை குடியரசுத் தலைவர்   வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

 

a

 

அருண்ஜெட்லிக்கு நேற்று திடீரென உடல்சோர்வும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டதால் காலை 10 மணிக்கு அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதயம் மற்றும் நரம்பியல் மைய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


                              
இந்நிலையில் அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்களிடம் கேட்டறிந்த வெங்கையா நாயுடு,  அருண் ஜெட்லியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக  கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி கிரிக்கெட் மைதானத்துக்கு 'அருண் ஜெட்லி' பெயர்....கேலரிக்கு கோலியின் பெயர்!

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த மாதம் காலமானார். அவர் டெல்லி மாநில கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவராக இருந்தார். அதனால் டெல்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பெரோஸ் ஷா கோட்லா என்ற பெயரை மாற்றி அருண் ஜெட்லியின் பெயரை சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. இதற்கான நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது. அருண் ஜெட்லிக்கு கவுரவம் சேர்க்கும் வகையில் டெல்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது.  

 Delhi International Cricket Ground NAME ARUN JAITLY AND VISITORS SEATING BUILDING VIRAT KOHLI NAME


இதேபோல் மைதானத்தில் உள்ள ஒரு பார்வையாளர் இருக்கை மாடத்திற்கு (கேலரி) இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயரும் சூட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட்கோலி, ஷிகர் தவான் உட்பட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டனர். 



 

Next Story

பிரபல கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜேட்லியின் பெயர்... கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு...

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் உடல் டெல்லியில் உள்ள நிகம்போத் மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

 

The Ferozeshah Kotal Grounds in New Delhi will be renamed as the Arun Jaitley Stadium.

 

 

கிரிக்கெட் மீது தனி ஆர்வம் கொண்டிருந்த அருண் ஜேட்லிக்கு மரியாதையை செலுத்தும் விதமாக டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்திற்கு அருண் ஜேட்லியின் பெயரை வைப்பது என டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இனி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானம் அருண் ஜேட்லி பெயராலேயே அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.