ADVERTISEMENT

ஜெ.மரணத்தில் எதையோ மறைக்கிறது அப்போலோ... ஆறுமுகசாமி ஆணையம் பதில்மனு!

10:48 AM Jul 30, 2019 | kalaimohan

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எதையோ மறைக்கும் நோக்கத்தில் விசாரணைக்கு அப்போலோ மருத்துவமனை தடைகோரியிருக்கிறது என ஆறுமுகசாமி ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

ADVERTISEMENT


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரணை நடத்திவந்த நிலையில் அப்போலோ நிர்வாகம் சார்பில் 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை நியமித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும், ஏற்கனவே விசாரணைக்கு அழைத்த மருத்துவர்களை மீண்டும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கிறது ஆணையம் இதனால் அவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுகிறது எனக்கூறி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்காலத் தடையை பெற்றிருந்தது அப்போலோ. இந்த இடைக்காலத்தடை இரண்டு முறை நீட்டிப்பும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. அதில் ஏதோ உள்நோக்கத்தோடு, எதையோ மறைக்கும் நோக்கத்தில் மருத்துவர்களை விசாரணைக்கு அனுப்ப அப்போலோ நிர்வாகம் மறுக்கிறது என நேரடி குற்றச்சாட்டை கூறியுள்ளது ஆறுமுகசாமி ஆணையம்.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT