Arumugasamy inquiry commission

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் போயஸ் கார்டனில் இருந்தவர்கள், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்பட பலருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பி வருகிறது. இந்த சம்மனை ஏற்றவர்கள் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அதனடிப்படையில் அப்போலோ இரைப்பை நிபுணர் பழனிச்சாமி இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.