Skip to main content

வன உயிரியல் பூங்காவில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற கும்பல் கைது! 

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலையின் ஒருப்பகுதியில் அணைக்கட்டு தொகுதிக்குள் அமிர்தி வன உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பூங்காவோடு சேர்த்து மான் போன்ற விலங்குகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து சுத்தி பார்த்துவிட்டு பொழுதை கழித்துவிட்டு செல்வர்.

 

arrested for trying to abduct sandalwood trees at forest zoo

 

ஜவ்வாதுமலை என்பது ஒருக்காலத்தில் சந்தனமரத்துக்கு பெயர் போனது. தரமான ஜவ்வாதுமலை சந்தனமர விற்பனைக்காகவே திருப்பத்தூரில் சந்தன மர குடோன் மிகப்பெரிய அளவில் இருந்தது. 25 வருடங்களுக்கு முன்பு அந்த குடோன் தீ பிடித்து எரிந்து போனது ஒருப்புறம், ஜவ்வாதுமலையில் இருந்த சந்தன மரங்களை திருட்டு தனமாக வெட்டியதால் 80 சதவிதம் சந்தனமரம்மில்லா மலையாகவுள்ளது. சிலயிடங்களில் மட்டும் சிலச்சில மரங்கள் நீண்ட ஆண்டுகளாக உள்ளது.

அந்த மரங்களோடு சேர்த்து கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் ஜவ்வாதுமலையில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

 

arrested for trying to abduct sandalwood trees at forest zoo

 

இந்நிலையில் நவம்பர் 5ந்தேதி விடியற்காலையில், அமிர்தி வன உயிரியல் பூங்காவுக்கு அருகில் உள்ள சில சந்தனமரங்களை வெட்டி கடத்த ஒரு கும்பல் முயன்றது. இந்த தகவல் கிடைத்து அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் அடங்கிய குழு, சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற கும்பலை மடக்கியது.

வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்த முயல, அதையும் மீறி அந்த கும்பலை சேர்ந்த 14 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 14 பேரிடமும் ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் வெட்டுவதற்கு பயன்படுத்திய இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

arrested for trying to abduct sandalwood trees at forest zoo

 

அவர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள், இந்த குழுவுக்கு தலைமை யார் ?, இவர்களின் பின்புலம் என்ன ? இந்த மரங்கள் பற்றி யார் தகவல் சொன்னது உட்பட பல தகவல்களுக்காக அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.