Skip to main content

ஏற்காடு பள்ளிக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல்; அமமுக பிரமுகரின் பேரன்கள் கைது!

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

Arrested grandsons of AmmK  member who broke into school and beaten students

 

ஏற்காட்டில், தனியார் பள்ளியின் விடுதிக்குள் புகுந்து மாணவர்களைத் தாக்கிய விவகாரத்தில் அமமுக கட்சிப் பிரமுகரின் பேரன்கள் இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.    

 

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பிரபலமான மான்ட்போர்ட் ஆங்கிலோ இந்தியன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 100க்கும்  மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். ஆதரவற்றோர்களுக்கு உதவுவதற்காக பள்ளி சார்பில் நிதி திரட்டப்படும். அதன்படி, இந்தப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஆண்டுவிழாவின் போது பிரமாண்ட கேக் ஏலம் விடப்பட்டது. அந்த கேக்கை பத்தாம் வகுப்பு மாணவர்கள் 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர்.     

 

இது தொடர்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. பத்தாம் வகுப்பு படித்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு மாணவன் மற்றும் அவனது நண்பர்களை 12ம் வகுப்பு மாணவர்கள் சிலர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவன், தான் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தனது அண்ணனிடம் தெரிவித்துள்ளார். அவர், தனது கூட்டாளிகளுடன் ஆகஸ்ட் 7ம் தேதி மான்ட்போர்டு பள்ளி விடுதிக்குள் புகுந்து, தனது தம்பியைத் தாக்கிய பிளஸ்2 மாணவர்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.    

 

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் ஏற்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த அமமுக பிரமுகர் ஒருவரின் பேரன் மாணிக்க ராஜா மற்றும் அவருடைய கூட்டாளிகள் தான் பள்ளி விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாகத் தேடி வந்தனர். முதல்கட்டமாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சரவண ஐயப்பன் (22), பொன்.கணேஷ் (21), மகாராஜா (24), துரைராஜ் (23), கடம்பூரைச் சேர்ந்த ஐயனார் (21) ஆகிய 5 பேரைக் கைது செய்தனர். இந்த சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அமமுக பிரமுகர் ஒருவரின் பேரனான மாணிக்க ராஜா என்பவரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.

 

தனிப்படை காவல்துறை தீவிர தேடுதலில், நெல்லை - தூத்துக்குடி சாலையில் உள்ள அம்மநாயக்கனூர் பகுதியில்  மாணிக்க ராஜா பதுங்கி இருப்பது தெரிய வந்தது. ஆக. 31ம் தேதி, அங்கு விரைந்த காவல்துறையினர் அமமுக பிரமுகரின் பேரன்களான சிவக்குமார் மகன் மாணிக்க ராஜா (20), ஜே.எஸ்.ராஜா மகன் கார்த்திக் ராஜா என்கிற மாணிக்க ராஜா (23) ஆகிய இருவரைக் கைது செய்தனர். இருவரையும் ஏற்காடு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்கள் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “எங்களுடைய தம்பியை மற்ற மாணவர்கள் தாக்கியது குறித்து தகவல் அறிந்ததும், நெல்லையில் இருந்து 8 பேரும், சென்னையில் இருந்து 6 பேரும் ஏற்காடு மான்ட்போர்டு பள்ளிக்கு வந்தோம். பள்ளி விடுதிக்குச் சென்று தம்பியைத் தாக்கிய மாணவர்களைத் தட்டிக் கேட்டோம். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால்  அவர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம்” என்று தெரிவித்துள்ளனர்.

 

பிடிபட்ட நபர்களிடம் இருந்து, ஒரு சொகுசு காரையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இவர்களில் மாணிக்கராஜா, தற்போது  சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். பிடிபட்ட இருவரும் ஏற்காடு நீதிமன்ற உத்தரவின் பேரில், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் 7 பேரைத் தேடி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.