Advertisment

அமைச்சர் ஜெயக்குமார் பற்றி முகநூலில் அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது!!

arrest  man who spread the scandal to the minister Jayakumar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பற்றி முகநூலில் அவதூறு தகவல்களைபரப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்டு ஊடகத்தின் முன் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார்.

Advertisment

கடலூர்மாவட்டம் காட்டுமன்னார்குடியைசேர்ந்தவர் வீரமுத்து. இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவர் 2017-ஆம் ஆண்டு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பற்றி முகநூல் பக்கத்தில் அவதூறாக தகவல் பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதையடுத்து நேற்றுமுன்தினம் வீரமுத்து சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்பினார். விமான நிலையத்தில் அவரதுபாஸ்போர்ட்டை ஆய்வு செய்த சைபர் க்ரைம் போலீசார் அது அமைச்சர் ஜெயக்குமாரைவிமர்சித்த வீரமுத்து தான் என உறுதி செய்தபின் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வீரமுத்துவை சைதாப்பேட்டை 13வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, தினமும் சிபிசிஐடி அலுவலகத்தில் 15 நாட்கள் ஆஜராகிகையெழுத்திடவும், அனைத்து ஊடகங்களின் முன் இதுபோன்று இனி செய்யமாட்டேன்எனமன்னிப்பு கேட்கவும் உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து முகநூல் பக்கத்தில் அவதூறு பரப்பியதற்காக வீரமுத்து அனைத்து ஊடகதத்தின்முன் மன்னிப்பு கேட்டார்.

FB jayakumar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe