arrest

Advertisment

பாலிடெக்னிக் விரவுரையாளர் தேர்வு முறைக்கேடு வழக்கில் மேலும் இரண்டு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரவுரையாளர் பணிக்கு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதை கண்டுப்பிடிக்கப்பட்டதை அடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளான சுப்ரமணி, பாஸ்கர் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்ட காவலில் வைத்து சென்னை மாநகர் காவல் ஆணையார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கில் இவர்களை சேர்த்து 9 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.