arjun sampath twitter issue covai police

பொது மேடைகளில் பேசும் போதும் , சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான பதிவுகளைபதிவிட்டும் தொடர்ந்து சர்ச்சையில்சிக்கி வரும் இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத்மீது புதிதாக ஒரு வழக்கைகோவை போலீசார் பதிவுசெய்துள்ளனர். சட்டமேதை அம்பேத்கரின்66 வது நினைவுதினம் நேற்றுநாடு முழுவதும்அனுசரிக்கப்பட்டநிலையில், கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்றில் அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்து இருந்தது சர்ச்சையான நிலையில், போஸ்டரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இந்த சர்ச்சை ஓய்வதற்குள், அர்ஜுன் சம்பத்தின் ட்விட்டர் பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

arjun sampath twitter issue covai police

அர்ஜுன் சம்பத், பாபர் மசூதிஇடிப்பு தினமான நேற்று ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டுஇருந்தார். அந்த பதிவானது, அயோத்தியில் பாபர் மசூதி இடித்ததைக் கொண்டாடும் வகையிலும்இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் உள்நோக்கம் உள்ளதாகவும் அந்தப் பதிவு இருந்தது. மேலும் இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் தடா ஜெ ரஹீம் என்பவரும்ட்விட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார்.

Advertisment

சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகளை பதிவிட்ட அர்ஜுன் சம்பத் மற்றும் தடா ஜெ ரஹீம் ஆகிய இருவர் மீதும், இரு பிரிவின் கீழ் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.