Skip to main content

“உங்களுக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டு இருக்கு..” ஃபோனில் மிரட்டிய போலி மாந்திரீக இளைஞர்கள்! 

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

Ariyalur police arrested three in cheating case

 

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரிடம் மாந்திரீக ஆசாமிகள் சிலர் போன் மூலம் பேசி உள்ளனர். அவர்கள் தங்கள் பாணியில் ‘உங்கள் குடும்பத்திற்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது. அதை எடுத்தால் தான் உங்கள் குடும்பம் மேலோங்கும்; இல்லாவிட்டால் கெட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும். உங்கள் குடும்பத்தில் நிம்மதி இருக்காது’ என விஜயகுமாரிடம் ஒருவித மிரட்டலாக பயமுறுத்தி பேசி அதற்குப் பரிகாரமாக மாந்திரீகம் செய்து கெட்ட ஆவிகளை போக்கி பில்லி சூனியத்தை நீக்கி விடுவதாக கூறி உள்ளனர். 


இதற்காக அவ்வப்போது விஜயகுமாரிடம் இருந்து 12 லட்சம் வரை பணம் பறித்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்கள் போலி மந்திரவாதிகள் என்பதை அறிந்த விஜயகுமார் அரியலூர் மாவட்ட சைபர்கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்தத் தகவல் திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் உத்தரவின் பேரில் விஜயகுமார் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து அந்த மாய ஆசாமிகளை தேடி வந்தனர். 

 

இந்தநிலையில், சேலம் மாவட்டம் எருமைப்பட்டி பகுதியில் இதே போன்ற ஒரு கும்பல் அப்பகுதி மக்களை மிரட்டி பில்லி சூனியம் வைப்பதாக கூறி பணம் பிடுங்கிவருவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து உடனடியாக போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்(27), இவரது நண்பர்கள் கிருஷ்ணன், தர்மராஜ், சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குமார்(39) என்பது தெரியவந்து. இவர்கள் நால்வரில் மூவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர் ஒருவரை தேடி வருகின்றனர். 

 

பிடிப்பட்ட மூவரிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் நால்வரும் சேர்ந்து செல்போன் எண்கள் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த அப்பாவி மனிதர்களை பில்லி சூனியம் இருப்பதாக கூறி மிரட்டி அவர்களிடமிருந்து பல லட்சம் பணம் பறித்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. 


போலி மந்திரவாதிகளை அரியலூர் அழைத்துவந்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன்கள், 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம், கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.