Skip to main content

அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அரசு அதிகாரிகள் மத்தியில் கலகத்தை ஏற்படுத்திய லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021
Ariyalur, Perambalur District Corruption Eradication Department raid among government officials

 

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ளது மின்சார வாரிய அலுவலகம். இங்கு உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்தவர் மாணிக்கம். கடந்த 2019 டிசம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார் மாணிக்கம். காரணம் அதே துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் அவரது வீட்டு பகுதியில் தாழ்வாக செல்லும் மின்சார லைனை மாற்றி அமைக்குமாறு உதவி செயற்பொறியாளர் மாணிக்கத்திடம் முறைப்படி மனு கொடுத்திருந்தார். அது சம்பந்தமாக மாணிக்கம் சரவணனிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக பணம் கொடுத்தால்தான் மின்சார லைனை மாற்றி அமைக்க முடியும் என்று ரேட் பேசியுள்ளார்.

 

இதை கண்டு நொந்து போன சரவணன் அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சந்திரசேகரனிடம் இது குறித்து புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ஆலோசனையின் படி செயற்பொறியாளர் மாணிக்கத்திடம் சரவணன் லஞ்சப் பணத்தை கொடுக்கும் போது அங்கிருந்த டி.எஸ்.பி சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் சுலோச்சனா ஆகியோர் மாணிக்கத்தை லஞ்சப் பணம் வாங்கும்போது கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர். இது சம்பந்தமான வழக்கு பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வருமானத்துக்கு அதிகமாகச் மாணிக்கம் சொத்து சேர்த்துள்ளது ஆதாரங்களுடன் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மாணிக்கத்தின் வீடு உட்பட அவர் சம்பந்தப்பட்ட உறவினர் வீடுகளிலும் ரெய்டு நடத்துவதற்கு உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் மாணிக்கத்தின் சொந்த ஊரான வெங்கடேசபுரம் வீடு மற்றும் அவரது தாயார் குடியிருந்து வரும் வெண்பாவூர் வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சந்திரசேகரன் இன்ஸ்பெக்டர் ரத்தின வளவன் தலைமையிலான போலீசார் நேற்று ரெய்டு நடத்தினார்கள். மதியம் ஒரு மணி முதல் மாலை 6 மணி வரை மாணிக்கத்திற்கு சொந்தமான வீடு அவர் தாயார் வீடு ஆகியவற்றில் ரெய்டு நடத்தி பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்கார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மின்வாரிய அதிகாரி ஒருவரது வீட்டில் நீதிமன்ற உத்தரவின்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்திய சம்பவம் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

“ எங்களுக்கு உத்தரவிடுங்கள்...” - அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

தமிழக அரசு மூலம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து  திட்டங்களைப் பெற்றுநிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அருன் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து லால்குடியில் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி ரவுண்டானாவில் தொடங்கியது. முன்னதாக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரப் பேரணியைத் தொடங்கி வைத்து பேசுகையில், “லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது பகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நடைபெற்றிருப்பதை நன்கு அறிவீர்கள். மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் காட்டிலும் ஒன்றிய அரசிடமிருந்து திட்டங்களைப் பெற்று நமது பகுதியில் நிறைவேற்றிட வேண்டும். இது நமது சொந்தத் தொகுதி என்பதால் அதிகமாகத் திட்டங்களைக் கொண்டு வந்து பணிகளைச் செய்திட உங்கள் ஆதரவு கேட்டு வந்துள்ளோம்.

Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

எங்களுக்கு உத்தரவிடுங்கள், நாங்கள் பணியாற்றத் தயாராக உள்ளோம். லால்குடி நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பொதுமக்கள் வசதிக்கேற்ப புதிய மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் அடுத்த மாதம்  தொடங்கப்பட உள்ளது. எனவே இப்படிப்பட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார்.