ADVERTISEMENT

அரியலூர், கள்ளக்குறிச்சிக்கு புதிய மருத்துவக்கல்லுரிகள்- மத்திய அரசு ஒப்புதல்!

08:56 PM Jan 28, 2020 | santhoshb@nakk…

தமிழகத்தில் அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இரு மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ADVERTISEMENT


தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இரு மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ரூபாய் 650 கோடியில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன. தமிழகத்தில் ஏற்கனவே 9 புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT