Skip to main content

அரியலூர் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி!!!

Published on 04/04/2020 | Edited on 04/04/2020
z

 

அரியலூர் மாவட்டம், உஞ்சினி அருகே உள்ளது அய்யனார் பெரிய ஏரி.  இந்த ஏரியில் ஆதி குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 15 வயது சஞ்சய் மற்றும் 13 வயது லட்சுமணன் இருவரும் குளிப்பதற்காக ஏரியில் இறங்கியுள்ளனர். நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் தத்தளித்து உள்ளனர். 

அந்தநேரத்தில் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் இவர்கள் தண்ணீரில் தத்தளித்து கதறியது யாருக்கும் கேட்காமல் போய்விட்டது, இதனால் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர்.  சில மணி நேரம் கழித்து அவர்கள் இருவரையும் காணவில்லை என்று அவர்களது குடும்பத்தினர் தேடியுள்ளனர். அப்போது மாணவர்கள் இருவரும் ஏரிக்கு குளிக்க சென்றதாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.  அதையடுத்து ஊர் மக்கள் பதறியடித்து, ஓடி போய் ஏரியில் இறங்கி தேடி உள்ளனர்.  ஆனால்,  அவர்களால் இருவரையும் சடலமாகவே மீட்க முடிந்துள்ளது. மேலும் இதே ஏரியில் கடந்த ஆண்டு ஒரு மாணவர் நீச்சல் தெரியாமல் குளிக்கச் சென்று தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உஞ்சினி  ஊர் மக்கள் கிராமத்து இளைஞர்கள் கடந்த காலங்களில் ஏரிகளிலும், குளங்களிலும், ஆறுகளிலும் ஓடைகளிலும் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே அவ்வப்போது சென்று சிறிதளவு தண்ணீர் இருக்கும் போதே பெற்றோர்கள் உறவினர்கள் உதவியுடன் நீந்தப் பழகிக் கொள்வார்கள்.  

காலப்போக்கில் கிராம இளைஞர்கள் தண்ணீரில் நீந்துவதை மறந்து  போய்விட்டனர்.  எனவே பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே பள்ளிக்கூடங்களில் நீச்சல் பயிற்சியையும் ஒரு பாடமாக வைத்து சொல்லித்தர வேண்டும்.  அதன்மூலம் வருங்காலத்தில் மாணவ-மாணவிகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  இதன் மூலம் வருங்கால தலைமுறையை காப்பாற்ற முடியும் என்கிறார்கள் உஞ்சினி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

கர்ப்பமாக்கிய காதலன்; உயிருக்குப் போராடும் மாணவி!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
college girl health was affected due to having pregnant

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவரது பேத்தி கலா(17)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெற்றோரை இழந்த இவர் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் திண்டுக்கல் காந்திகிராம் பகுதியில் உள்ள ஒரு  கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கலாவை பார்ப்பதற்காக அவரது அத்தை கல்லூரி விடுதிக்குச் சென்றார். அப்போது அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் பின்னர் கலாவை அழைத்துச் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு கலா கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலாவின் அத்தை, கலாவிடம் கர்ப்பத்துக்கான காரணம் குறித்து கேட்டபோது, திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை பகுதியைச் சேர்ந்த தனது காதலன் ராம்குமார் தான் தனது கர்ப்பத்துக்கு காரணம் எனத் தெரிவித்தார். இந்த வாலிபர் காந்திகிராம் சின்னாளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில், கலாவை அவர் தனது அண்ணன் வீட்டுக்கு அழைத்துச் சென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவருடன் தனிமையில் இருந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து கலாவின் கர்ப்பத்தை அவரது அத்தை கலைக்க முடிவு செய்தார். அதன்படி திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை இரு தினங்களுக்கு முன்பு சேர்த்தார். பின்னர் மருத்துவர்கள் அந்த மாணவிக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். ஆனால் பல மணி நேரமாகியும் உதிரப்போக்கு நிற்கவில்லை.  அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அந்த மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விவகாரம் அரசு மருத்துவமனை வரை சென்றதால் போலீஸ் கவனத்திற்கு சென்றது. அதைத் தொடர்ந்து திருவரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நளினி மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான ராம்குமார், கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்த அவரது அத்தை  மற்றும் கர்ப்பத்தை கலைத்த டாக்டர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.