அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகன் ஜெகன்(14), சுப்பிரமணியன் மகன் ஆணைமுத்து(14) இருவரும் துக்கபுரம் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். மருதமுத்து மகன் அன்பரசன்(13) அதே கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, விடுமுறை நாட்களாக இருப்பதால் நண்பர்களுடன் அதே கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
அப்போது, மாணவர்கள் 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து 3 மாணவர்களின் உடல்களும் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த குளத்தில் அண்மையில் தூர்வாரும் பணி நடந்துள்ளது. இதனால், குளத்தில் ஆழம் தெரியாமல் மாணவர்கள் 3 பேரும் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. மாணவர்கள் இறப்பு குறித்து செந்துறை போலீஸார் விசாரிக்கின்றனர். கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் 10 சிறுவர்கள் இறந்துள்ளனர் என்பது அதிர்ச்சிக்குரிய விஷயமாகும்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });