Skip to main content

பொன்பரப்பி கலவர எதிரொலி - ஜெயங்கொண்டத்தில் சாலை மறியல்

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

 


அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் நேற்று தலித் மக்களின் வீடுகளை அடித்து நொறுக்கியதற்கு எதிராக இன்று ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

p

 

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் உள்ள தலித் மக்கள் தங்கள் வீட்டு சுவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனின் சின்னமான பானை சின்னத்தை வரைந்திருந்ததால் அப்பகுதிக்குள் புகுந்த வன்னிய மக்கள் சிலர் வீடுகளை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த சில தலித் மக்களையும் தாக்கினர். இதனால் நேற்று பரபரப்பான சூழல் உருவானது.

 

இந்த தாக்குதலில் 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும் மேலும் ஒருவர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் ஜெயங்கொண்டம் பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பொன்பரப்பி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஆசிரியருக்கு பதக்கம்!

Published on 10/04/2021 | Edited on 11/04/2021

 

PONPARAPPI GOVERNMENT SCHOOL ZOOLOGY TEACHER STUDENTS FIRST PRICE

 

அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளியில், விலங்கியல் ஆசிரியர் பஞ்சாபிகேஷன் மேற்பார்வையில், 'புகையிலை பிடிப்பதால் ஏற்படும் தீய விளைவுகள்' குறித்து அத்துறை மாணவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு முதலிடம் பிடித்துள்ளனர்.

 

அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ், 11-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில், பல சிறப்பு நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

அதில், 'SCOPE PROJECT'-ன் கீழ், இயற்பியல், விலங்கியல், வேதியியல் உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளின் குறிப்பிட்ட பகுதியை எடுத்து மாணவர்கள் ஆய்வு செய்வர்.

 

இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில், ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று மாணவர்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்களை ஊக்கப்படுத்தி வெற்றிவாகை சூட உதவும் ஆசிரியருக்கும் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

 

அந்த வகையில், கடந்த மார்ச் மாதம் 9-ஆம் தேதியன்று அரியலூர் RMSA அலுவலகத்தில் நடைபெற்ற போட்டியில், பொன்பரப்பி அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.

 

அப்போது, 'புகையிலை பிடிப்பதால் ஏற்படும் தீய விளைவுகள்' குறித்து மேற்கொண்ட ஆய்வுகளை கருத்தரங்கில் விளக்கினர். மிகப் பெரிய சமூகப் பிரச்னையை நேர்த்தியாக எடுத்துரைத்து நடுவர்களின் பாராட்டைப் பெற்று முதல் பரிசைத் தட்டிச்சென்றனர். அவர்களுக்கு உறுதுணையாக இருந்த விலங்கியல் துறை ஆசிரியர் பஞ்சாபகேசன் அவர்களுக்கும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

 

 

 

Next Story

இளம்பெண் கொலையா....தற்கொலையா? 

Published on 18/11/2019 | Edited on 19/11/2019

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கிராமம் ஊரைச் சேர்ந்த பிரபாகரன் (27). இவர் மின்சார வாரியத்தில் ஊழியராக பணி செய்து வருகிறார். இவருக்கும் பொன்பரப்பிகிராமம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ஊமத்துரை மகள் கார்த்திகாவிற்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
 

ariyalur incident


இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள், சண்டைகள், பிரச்சினைகள் இருந்துள்ளன. உறவினர்கள் அவ்வப்போது இருவரையும் சமரசம் பேசி சேர்த்து வைத்தும், இவர்களுக்குள் சச்சரவுகள் தொடர்ந்துள்ளன.

இந்த நிலையில், நேற்று பிரபாகரன் வீட்டில் கார்த்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை ஊமைத்துரைக்கு தகவல் வந்தது. பிரபாகரன் உறவினர்கள் மற்றும் ஊமத்துரை உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். கார்த்திகாவின் உடலை பார்த்து கதறி அழுத அவர்கள் "கார்த்திகா தற்கொலை செய்து கொள்ளவில்லை, பிரபாகரன் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளார்" என்று கூறி கோபம் அடைந்த அவர்கள் பிரபாகரன் வீட்டை அடித்து நொறுக்கினார்கள்.

இந்த சம்பவம் பற்றி செந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி திருமேனி, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் கார்த்திகாவின் உடலை மினி டெம்போவில் பொன்பரப்பி தூக்கி செல்ல அவரது உறவினர்களின் முயற்சி செய்தனர். இதனால் இரு தரப்புக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

ariyalur incident


இந்த சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கார்த்திகா மரணம் கொலையா? தற்கொலையா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மை நிலை தெரியவரும் என்கிறது காவல்துறை, இதற்கிடையே திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் மணப்பெண் மரணமடைந்தால் இந்த மரணத்தைப்பற்றி கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை செய்யப்படும். அதன்படி உடையார்பாளையம் கோட்டாட்சியர் விரைவில் விசாரணை செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.