Skip to main content

மது பாட்டில்களுடன் பணத்தையும் கொள்ளையடித்த மர்ம நபர்கள்

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

ariyalur district irumbulikurichi tasmac incident 

 

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கூடத்தில் அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் மது வாங்க தினசரி வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி இரவு மதுக் கடையின் விற்பனையாளர் சுப்பிரமணியன் விற்பனையை முடித்துவிட்டு கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். மறுநாள் காலை 11 ஆம் தேதி மதுக்கடை வழியாகச் சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் ஷட்டர் ஒரு பக்கம் திறந்த நிலையில் இருந்துள்ளதைக் கண்டு திடுக்கிட்டனர்.

 

இதுகுறித்து உடனடியாக விற்பனையாளர் சுப்பிரமணியனுக்கு தகவல் அளித்தனர். அவர் விரைந்து வந்து கடையைப் பார்த்தபோது கடையின் பக்கவாட்டு சுவரில் ஓட்டைப் போட்டு ஷட்டரைத் திறந்து கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக விற்பனையாளர் சுப்பிரமணியன் இரும்புலிகுறிச்சி போலீசாருக்குத் தகவல் அளித்தார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் வேல்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் போலீசார் டாஸ்மாக் கடைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

 

விசாரணையில் விற்பனையாளர் சுப்பிரமணியன் தெரிவிக்கையில், "கடையில் வசூலான 2 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கடையில் வைத்துப் பூட்டிவிட்டுச் சென்றேன். அந்தப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததோடு சுமார் 20 மதுபான பாட்டில்களும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக" தெரிவித்தார்.

 

இது குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் கொள்ளை நடத்தியவர்கள் பற்றி  தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.