Advertisment

கூண்டை விட்டு வெளியே வந்த 'அரிசி ராஜா!'

கோவை மாவட்டம்,பொள்ளாச்சி, ஆனைமலையில்நவமலை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த'அரிசி ராஜா' எனும் காட்டு யானை தொடர் அட்டகாசம் செய்து வந்த நிலையில்,6 வயது சிறுமியையும்,மாகாளி என்பவரையும் கொன்றது.அதனைத் அடுத்து வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்ட அந்த யானை மீண்டும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்ததால் வனத் துறையினர் போராடி அரிசி ராஜாவை கடந்த 9 மாதங்களுக்கு முன்புகோவை வரகளியாறு பகுதிக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தனர். வளர்ப்பு யானையாக மாற்ற வனத்துறையினர் அதனைக் கூண்டில் அடைத்து வைத்திருந்த நிலையில், பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது.

Advertisment

இந்நிலையில் 9 மாத பயிற்சிக்குப் பிறகு தற்போது அரிசி ராஜா கூண்டை விட்டு வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது. அரிசி ராஜா பாகனுக்குகட்டுப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

kovai forest elephant
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe