Skip to main content

'மாமனிதன் வைகோ' ஆவணப் படத்தின் டிக்கெட் வழங்குவதில் வாக்குவாதம்... சமரசம் செய்து வைத்த துரை வைகோ!

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

Argument over the ticketing of 'Mamanidhan Vaiko' documentary film... Durai Vaiko compromised!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குறித்த 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படம் செப்டம்பர் 18- ஆம் தேதி திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆவணப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (08/10/2022) தேனி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தேனி வெற்றி சினிமாஸில் 'மாமனிதன் வைகோ' ஆவணப்படம் திரையிடப்பட்டது.

 

இந்த நிகழ்விற்காக ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ வெற்றி திரையரங்கிற்கு வந்தார். அதை தொடர்ந்து, தேனி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆவணத் திரைப்படத்தை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ம.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் வந்திருந்தனர். அப்போது ம.தி.மு.க. முன்னாள் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் சிவா என்பவர், ஆவணப்படம் காண்பதற்கான டிக்கெட் வழங்கவில்லை என்று மாவட்ட பொறுப்பாளர் இராமகிருஷ்ணனிடம் டிக்கெட் கேட்டுள்ளார். 

 

அதற்கு மாவட்ட பொறுப்பாளர் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைக் கண்ட கட்சி நிர்வாகிகள் இருவரையும் சமாதானப்படுத்தியும் வாக்குவாதம் முற்றியதால் திரையரங்கிற்கு உள்ளே சென்ற துரை வைகோ, வாக்குவாதம் நடைபெற்ற கார் பார்க்கிங் இடத்திற்கே வந்து இருவரையும் சமரசம் செய்து வைத்துச் சென்றார்.

 

இருப்பினும் திரையரங்கிற்கு உள்ளே செல்லும் வரை இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசிக்கொண்டே இருந்தனர். இதன் காரணமாக திரையரங்க வளாகத்தில் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.