விநாயகர் சதுர்த்தி மற்றும்சுபமுகூர்த்த தினம், வார இறுதிகாரணமாககிளம்பாக்கம்பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பேருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதனால் பல பயணிகள் இரவு முழுக்க காத்திருந்து அதிகாரிகளுடன்வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினம் காரணமாக கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியதால் பேருந்துகள் இல்லாமல் தவித்தனர். அதேபோல் வந்து நிற்கும் பேருந்துகளில் இடம் பிடிப்பதற்காக பொதுமக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு ஏறினர்.சரியான பேருந்து வசதி இல்லை என வெகு நேரமாக காத்திருந்த பயணிகள் அங்கிருந்தஅதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.சிலர் ஆபத்தான முறையில் பேருந்துகளில் இடம் பிடிக்க முயன்ற காட்சிகளும்இணையத்தில் வைரலாகி வருகிறது.