Skip to main content

'தேங்காய் உருட்டல் முறை'யில்  நீரோட்டம் கண்டறியும் விருத்தாசலம் பகுதி விவசாயிகள்!

Published on 03/07/2020 | Edited on 04/07/2020
Area Cultivators for 'Coconut Rolling System'

 

“கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக…” என்பது முன்னோர் பழமொழி. தற்போது உள்ள சூழ்நிலையில் விவசாயிகள் பெரும்பாலும் கிணறு வெட்டி விவசாயம் செய்யும் பழக்கத்தை விட்டு விட்டு, போர்வேல் இயந்திரத்தை கொண்டு லட்சக்கணக்கில் செலவு செய்து, பூமியை துளையிட்டு விடிவதற்குள் ஆழ்துளைக் கிணற்றினை உருவாக்குகின்றனர். ஆனால் அவ்வாறு தோண்டப்படும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் கிடைக்கிறதா, இல்லையா என்பது கேள்விகுறியாகத்தான் உள்ளது. 300 அடி 500 ஆழம் போர்வெல் போட்டு தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் விவசாயிகள் பாடு அதோகதிதான்.

பழங்காலங்களில விவசாயிகள் நிலத்தடி நீர் மட்டத்தை கண்டறிய கரையான் புற்று, அத்திமரம், நாவல் மரம், மருத மரம், வேம்பு மரம் உள்ளிட்ட மரங்கள் வளரும் இடங்கள், பசுமாடு அசை போடுவதற்காக அமரும் இடங்களில் நீரோட்டம் இருப்பதை கண்டறிந்தனர்.

அதன் வழியில் ஒன்றான தேங்காய் உருட்டல் முறையில் பூமிக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தை கண்டறியும் முறையினை தற்போதும் விருத்தாசலம் பகுதி விவசாயிகள் பெரும்பாலனோர் பயன்படுத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பெரியகண்டியாங்குப்பம் கிராமத்தில் உள்ள ஜெயகுரு என்பவரின் நிலத்தில் தேங்காய் உருட்டல் முறையில், பூமிக்கு அடியில் உள்ள நீரோட்டத்தை கண்டறிந்தனர். குடுமி மட்டும் உள்ளவாறு உலர் தேங்காவை உறித்து  “எல்” வடிவில்  கையினை வைத்து உள்ளங்கையில் தேங்காவை வைத்துக்கொண்டு நிலத்திற்கு மேல் நடக்கின்றனர். அப்போது எவ்விடத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதோ அந்தப்பகுதிக்கு தேங்காயை கொண்டு சென்றால்,  தேங்காயின் குடுமி 90 டிகிரி-ல் வானத்தை நோக்கி இருக்கும்.

 

Area Cultivators for 'Coconut Rolling System'


இவ்வாறு 90 டிகிரியில் தேங்காயின் குருமி இருந்த இடங்களை அளவிட்டு கொள்கின்றனர். மேலும் வயல் முழுவதும் நடந்து மேற்கொண்டு நீரோட்டம் செல்லும் வழியை கண்டுபிடித்து அவற்றிற்கு மையமாக உள்ள இடத்தில், தாம்பூலத்தின் மேல் தேங்காயை வைத்து, அதற்குமேல் ஒருவரை அமர வைக்கின்றனர். அப்போது குறிப்பிட்ட நேரத்தில் தேங்காய் தானாகவே சுற்றுவதாக கூறுகின்றனர். பின்னர் பூமிக்கு அடியில் உள்ள தண்ணீரின் தொலைவை, ஒவ்வொரு சுற்றுக்கும் கணக்கிட்டு தொலைவை கண்டறிந்து கூறுகின்றனர்.

பழங்கால முறைகளில் ஒன்றான தேங்காய் உருட்டல் முறையில் 100% வெற்றி அடைந்து சிறப்பான முறையில், வற்றாத நிலத்தடி நீர்மட்டத்தை  கண்டறிந்ததாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். விஞ்ஞானம் ஏதுமில்லாத காலத்தில் நமது முன்னோர் மெய்ஞானத்தின் துணையோடு பல அற்புதங்களை நிகழ்த்தினர். அதுபோன்ற பழங்கால முறையில் நீரோட்டம் கண்டுபிடிப்பது ஆச்சர்யத்தை தருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.