!["Are you conducting a search because you don't give Mamul?" - DMK leader who argued with the officials](http://image.nakkheeran.in/cdn/farfuture/JIrLhZiym-ewZDjf-Sx965UVbRY58LckeGLmj3h5gIY/1685633802/sites/default/files/inline-images/nm167_0.jpg)
மயிலாடுதுறையில் பிரபல டீக்கடை ஒன்றில் நகராட்சி சுகாதாரத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்ட நிலையில் திமுக பிரமுகர் அருகில் உள்ள கடைகளில் விதிகள் பின்பற்றப்படாத நிலையில் இங்கு மட்டும் ஏன் சோதனை செய்கிறீர்கள் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை கடைவீதி பகுதியில் அமைந்துள்ள பிரபல டீக்கடையான குரு டீக்கடையில் நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் சீனிவாசன் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர். இங்கு தயாரிக்கப்படும் பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவு பண்டங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யில் தயாரிப்பதாகவும், செய்தித்தாளில் எண்ணெய் பண்டங்களை வைத்துக் கொடுப்பதாகவும் கூறி நகராட்சி அதிகாரிகள் கடைக்கு பூட்டு போட்டு சீல் வைப்பதாகத் தெரிவித்தனர்.
அப்பொழுது அங்கு வந்த புளியந்தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர் அமர்நாத் என்பவர் டீக்கடைக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். இந்த பகுதியில் எத்தனையோ கடைகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இந்த கடை மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கிறீர்கள். மாமூல் தராததனால் இப்படி செய்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.