Skip to main content

மீன் பிடிப்பதில் விதிமுறைகள் மீறப்படுகிறதா?  கடலில் சென்று ஆய்வுசெய்த கலெக்டர்! 

Published on 22/07/2021 | Edited on 22/07/2021

 

Are fishing regulations being violated? Collector who went to sea and inspected

 

கடலின் மீன் வளத்தைப் பாதுகாக்கும் வகையில் சுருக்கு மடி வலை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி 5 நாட்டிக்கல் பகுதிக்குள் விசைப்படகை மீன்பிடிக்க பயன்படுத்துவது, இழுவலையின் மடிப்பகுதியில் 40 மில்லி மீட்டருக்கு குறைவான அளவு கொண்ட இழுவலைகளைப் பயன்படுத்துவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. அதேசமயம் சுருக்குமடி வலை தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருதரப்பு மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு தரப்பு மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று போராட்டம் நடத்திவருகின்றனர்.

 

இந்த நிலையில், தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அமல்படுத்தும் விதமாக மீன்வளத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு, இயந்திரமயமாக்கப்பட்ட இழுவலை விசைப்படகுகளில் வலைகளின் மடிப்பகுதியின் கண்ணியளவு மற்றும் விசைப்படகு இயந்திரத்தின் குதிரை திறன் ஆகியன குறித்து ஆய்வுசெய்து விதிமுறை மீறிய நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஐ.பி, விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் மீனவர்கள் முதுநகரில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்திற்கு வந்து புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

 

Are fishing regulations being violated? Collector who went to sea and inspected

 

எனவே கடலூரில் சுருக்குமடி வலை பிரச்சனை மற்றும் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி இழுவலை தடை உள்ளிட்ட பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அதிகாரிகளுடன் கடலூர் மீன்பிடி துறைமுகம் சென்று அங்கு சுருக்குமடி வலை பயன்படுத்தப்படுகிறதா? இழுவை விசைப்படகு இயந்திரத்தின் அடிப்பகுதி கண்ணியளவு மற்றும் விசைப்படகு இயந்திரத்தின் குதிரைத் திறன் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அதிகாரிகளுடன் படகில் கடலுக்குச் சென்றார். கடலில் 5 நாட்டிக்கல் மைல் அளவுக்குப் பயணம் செய்த அதிகாரிகள், கடலில் மீன்பிடி படகுகளில் விதிமுறைகள் மீறப்படுகிறதா என ஆய்வுசெய்தனர். 

 

மேலும், பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகள், மிக தாழ்வான பகுதிகள், வடிகால்கள் மூலமாக மழைநீர் கடலுக்குச் செல்லும் பகுதிகளையும் ஆய்வுசெய்தனர். பரங்கிப்பேட்டை முடசல் ஓடை வரையில் சென்று அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியருடன் கூடுதல் மாவட்ட ஆட்சியர்கள் ரஞ்சித்சிங் (வருவாய்), பவன்குமார்ஜி (வளர்ச்சி) கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மீன்வளத் துறை துணை இயக்குநர் காத்தவராயன், வட்டாட்சியர் பலராமன் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆய்வில் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.