Skip to main content

அரவக்குறிச்சியில் வேட்புமனுத்தாக்கல் செய்யமுடியாமல் வேட்பாளர்கள் தவிப்பு!!!

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

இன்று பல்வேறு வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்யவந்ததால், இன்னும் வேட்புமனுத்தாக்கல் செய்யமுடியாமல் நிறைய வேட்பாளர்கள் தவித்து வருகின்றனர். 

 

aravakkurichi



4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றோடு நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று மட்டும் 42 வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்துள்ளனர். வழக்கமாக 11 மணிமுதல் 3 மணிவரை மட்டுமே வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். ஆனால் தற்போதுவரை வேட்புமனு பரிசீலனை முடியவில்லை. 3 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது, அவர்கள் காத்திருக்கின்றனர். திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 24ம் தேதி மனுத்தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்