Skip to main content

அறப்போர் இயக்கம் கருத்து தெரிவிக்க தடைகோரிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!!!

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

 

arappor iyakkam


 

தேர்தல் நேரத்தில் அறப்போர் இயக்கம் அவதூறு பரப்புரை மேற்கொள்வதாக  அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகாரளித்திருந்தார். மேலும் அவதூறு பரப்பியதற்காக அறப்போர் இயக்கம் ரூ.1 கோடி நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அறப்போர் இயக்கம் ஊழலுக்கு எதிராக செயல்படும் இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அண்ணாமலையின் மைத்துனரும் எஸ்.பி.வேலுமணியும் பார்ட்னர்கள்...” - அம்பலப்படுத்தும் மூத்த பத்திரிகையாளர்

Published on 06/08/2023 | Edited on 06/08/2023

 

Annamalai cousin Mathura and Velumani are partners says journalist Pandian

 

அண்ணாமலையின் பாதயாத்திரை மற்றும் தற்கால அரசியல் குறித்து தன்னுடைய கருத்துகளை மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்....

 

“அண்ணாமலையின் அரசியல் கர்நாடகத் தேர்தலுக்குப் பிறகு பாதாளத்துக்கு சென்றுவிட்டது. சி.டி. ரவியை தூக்கிவிட்டார்கள். கர்நாடக ஃபார்முலாவில் பாஜக பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது. அங்கு மீண்டும் பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் மிகப்பெரிய தோல்வியைக் கண்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பிம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த தேர்தல் கர்நாடக சட்டமன்ற தேர்தல். தமிழ்நாட்டில் பாதயாத்திரை மூலம் தங்களுக்கான வாக்கு வங்கியை உருவாக்க முடியும் என்று இவர்கள் நினைக்கின்றனர்.

 

அண்ணாமலை தொண்டர்களோடு ஒருவராக இருப்பதில்லை. கன்ஷிராம், மாயாவதி போன்றவர்கள் தலித் அரசியலுக்காகப் பயன்படுத்திய வேனை இவர்கள் தங்களுடைய கட்சிக்காக பயன்படுத்துகின்றனர். அண்ணாமலையை ஆர்எஸ்எஸ் தான் கட்டுப்படுத்துகிறது. அவர்களோடு இவர் நேரடி தொடர்பில் இருக்கிறார். அதனால்தான் இவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அண்ணாமலையின் பெயரைச் சொல்லி அவருடைய மைத்துனர் வசூல் வேட்டை நடத்துகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அண்ணாமலைக்கு பணம் கொடுக்கின்றனர். அண்ணாமலையின் மைத்துனருடன் முன்னாள் அமைச்சர் வேலுமணி பார்ட்னராக இருக்கிறார். அண்ணாமலையின் பயணத்துக்கு வேலுமணி, தங்கமணி, வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் பணம் கொடுத்துள்ளனர். இதனால்தான் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார். 

 

அதிமுகவும் பாஜகவும் கட்சிகள் என்கிற அடிப்படையில் வேறுவேறாக இருந்தாலும், இருவரும் ஒன்றுதான். ஒருவருடைய கொள்கையை இன்னொருவர் எப்போதோ ஏற்றுக்கொண்டு விட்டனர்.  ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை சென்ற பிறகுதான் பாஜக கதற ஆரம்பித்தது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்ததே அந்த யாத்திரைதான். அண்ணாமலை செல்வது வீட்டிலிருக்கும்போது நாம் செல்லும் வாக்கிங் போன்றதுதான். உலகிலேயே மாலை 4 மணிக்கு ஆரம்பித்து 6 மணிக்கு முடிக்கிற ஒரே பாதயாத்திரை அண்ணாமலையுடைய பாதயாத்திரைதான். இவர் வைத்திருக்கும் புகார் பெட்டியில் புகார் கொடுக்கும் மக்களுடைய குறையை எவ்வாறு தீர்க்கப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாது. முதலமைச்சர் சொல்வது போல் இது ஒரு பாவ யாத்திரை தான்” என்றார்.

 

 

 

Next Story

100 கோடி ரூபாய் போலி பத்திரப்பதிவு அம்பலம்; வசமாக சிக்கிய நயினார் பாலாஜி - ஜெயராமன்

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

 Arappor Iyakkam Jayaram interview

 

பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் மகனுடைய போலி பத்திரப்பதிவு வழக்கு குறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் விவரிக்கிறார்

 

நயினார் நாகேந்திரனின் மகனுடைய போலி பத்திரப்பதிவு குறித்த புகாரை முதலில் அறப்போர் இயக்கம்தான் வழங்கியது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி, இளையராஜா என்பவரிடமிருந்து விருகம்பாக்கத்தில் 1.3 ஏக்கர் நிலத்தை 46 கோடிக்கு வாங்கினார். அதன் சந்தை மதிப்பு 100 கோடி வரை இருக்கும். சென்னையில் இருக்கும் இந்த நிலத்தை திருநெல்வேலியில் உள்ள சப்-ரெஜிஸ்டரார் அலுவலகத்தில் பதிவு செய்தனர். சட்டப்படி இது தவறு. யாருடைய நிலம் இது என்பதை அவர் சரிபார்த்திருக்க வேண்டும். 

 

இளையராஜா என்கிற நபர் ஏற்கனவே மோசடிகளுக்குப் பெயர் போனவராக இருக்கிறார். பட்டா சரியாக இருந்தால்தான் பத்திரப்பதிவு செய்யவே முடியும். இளையராஜாவின் பெயரில் அந்தப் பட்டா இல்லை. அந்த ஒரு நிலத்துக்கே 15 பதிவுகளும், பணப்பரிமாற்றங்களும் நடந்திருக்கிறது. அந்த சப்-ரெஜிஸ்டரார் இது எதைப் பற்றியும் விசாரிக்காமல் இவர்களோடு சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டார். திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. இவை அனைத்தையும் குறிப்பிட்டு நாங்கள் புகார் கொடுத்திருக்கிறோம்.

 

இப்போது அந்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தவறே நடக்காமல் நடவடிக்கை எடுத்தால் அரசியல் பழிவாங்கல் என்று சொல்லலாம். இங்கு நடந்த அனைத்து தவறுகளுக்கும் ஆதாரம் இருக்கிறது. மற்றவர்கள்தான் தவறு செய்தனர், அவை தனக்குத் தெரியாது என்று நயினார் பாலாஜி சொல்கிறார். இவரும் சேர்ந்துதான் அந்த தவறைச் செய்திருக்கிறார். இளையராஜா என்பவர் இதில் மட்டுமல்லாமல், இதுபோல் பல குற்றங்களைச் செய்தவர். விசாரணையில்தான் இது குறித்த அனைத்து உண்மைகளும் வெளியே வரும்.

 

நயினார் பாலாஜி தானும் ஏமாற்றப்பட்டதாக சொல்கிறார். ஆனால் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. திருநெல்வேலியில் பத்திரப்பதிவு செய்ததே இவர்களுக்கு அங்கு செல்வாக்கு இருப்பதால்தான். பட்டா இல்லாத நிலத்தை ஒருவர் விற்க வந்தால் நீங்கள் எதையும் விசாரிக்காமல் வாங்கி விடுவீர்களா? இது மிகவும் ஆபத்தான ஒரு விஷயம். இவர்கள் நீதிமன்றத்துக்கு சென்று தங்களுக்கான தீர்வைப் பெறுவார்கள். ஆனால் சாதாரண ஏழை மக்களின் நிலை என்ன? அவர்கள் ஏமாற்றப்பட்டால் அவர்களால் கோர்ட்டுக்கு சென்று வாதாட முடியுமா?

 

இந்தத் துறையே ஒரு மாஃபியா துறை போல் இயங்கி வருகிறது. இப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகளால் அதிகம் பாதிக்கப்படுவது சாமானிய மனிதர்கள்தான். இளையராஜா என்பவரை இவர்கள் கைது செய்திருந்தால் பல்வேறு உண்மைகள் வெளியே வந்திருக்கும். இந்த வழக்கு இன்னும் விசாரணை அளவில்தான் இருக்கிறது. அதிகாரத்துக்கு நெருக்கமாக இருப்பதால் குற்றவாளிகள் காப்பாற்றப்படும் சூழலும் இருக்கிறது.