Skip to main content

வானத்தை நோக்கி சுட்ட வீரர் - பயந்து ஓடிய பாமகவினர்

Published on 18/04/2019 | Edited on 18/04/2019

 

அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. திமுக சார்பில் ஜெகத்ரட்சகனும், பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தியும் போட்டி போடுகின்றனர். இதனால் பாமக நிர்வாகிகள் கார் மூலமாக தொகுதியை வலம் வந்தனர்.

 

p

 

ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்விசாரம் பகுதியில் இந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றிருந்த வாக்கு மையத்தை பார்வையிட பாமக முன்னாள் மத்திய ரயில்வே துறை அமைச்சர் வேலு, முன்னாள் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் இளவழகன் காரில் வந்தனர்.

 

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி, காரை நிறுத்தி காரை 100 மீட்டருக்கு வெளியே இருக்க வேண்டும் என்று கூறியதால் அங்கிருந்து தொண்டர்கள் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்தனர். இந்த வாக்குவாதம் மேலும் முற்றியதால் அதிக அளவில் தொண்டர்கள் கூட்டம் கூடியதால் கூட்டத்தைக் கலைக்க அங்கிருந்த சி. ஆர். பி. எஃப் துணை ராணுவ வீரர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு செய்தார். 

 

p

 

அதனால் அங்கிருந்த தொண்டர்கள் பயந்து ஓடினர். துப்பாக்கி சூடு செய்த பிறகு ஏன் துப்பாக்கி சூடு செய்தாய்?, இங்க என்ன கலவரமா நடந்தது என்று துணை ராணுவத்தோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பாமக நிர்வாகிகள்.

 

இந்த தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பர்வேஷ்குமார், ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் கூட்டத்தை கலைக்கவே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அப்படி நடத்தவில்லையென்றால் பூத்தை கைப்பற்றியிருப்பார்கள் என்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இதனால் அந்த வாக்குசாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.     

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய கல்விக் கொள்கை குறித்து ஜெகத்ரட்சகன் கேள்வி... பதிலளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர்!

Published on 11/08/2021 | Edited on 11/08/2021

 

Jagathratsagan Question on National Education Policy; Union Education Minister who responded

 

திராவிட முன்னேற்ற கழக அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன் (09.08.2021) அன்று, மக்களவையில் குழுக் கல்வி முறையை வளர்த்தெடுக்க திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா? என்றும், தேசியக் கல்வி கொள்கையில் உயர் கல்வியில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை வரும் 2035ஆம் ஆண்டிற்குள் அதிகரிக்க ஏதேனும் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளனவா? என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் விரிவான கேள்வியை எழுப்பினார்.

 

அதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் கூறியதாவது, “குழுக்கல்வி முறையை, கூகுள் போன்ற செயலிகள் மூலம் வளர்த்தெடுக்க 25,000க்கும் அதிகமான பேராசிரியர்களுக்கு உரிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, வகுப்பறைகளில் பயன்படுத்தும் வகையில் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வருகின்ற 2035ஆம் ஆண்டிற்குள் உயர் கல்வியில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் 50 விழுக்காட்டை அடையும் வகையில் திறந்தவெளி, தொலைத் தொடர்பு மற்றும் இணையவழி கல்வி முறையை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன், மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு உரிய முறைகளை வகுத்துள்ளது. அனைத்திந்திய தொழிற்கல்வி குழுமம் (ICTE) வாயிலாகவும் உரிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு, இவ்விதிமுறைகள் அனைத்தும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.” இவ்வாறு கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.