வேலூர் மாவட்டத்தில் உள்ள உடற்பயிற்சி கூடங்களில் சார்பில் மிஸ்டர் வேலூர் 2018 என்கிற போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில் வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், வேலூர், காட்பாடி, ஆற்காடு, இராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதியை சேர்ந்த 100க்கும் குறையாத வாலிபர்கள் ஆணழகன் போட்டியில் கலந்துக்கொள்வது வழக்கம்.
ADVERTISEMENT
இந்த ஆண்டுக்கான ஆணழகன் போட்டி ஆம்பூர் நகரில் கடந்த ஆகஸ்ட் 12ந்தேதி மாலை நடைபெற்றது. இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இளைஞர்கள் தங்களது உடல் உறுதி மன்றும் அழகை வெளிப்படுத்தினர்.
போட்டியின் இறுதியில் இந்த ஆண்டுக்கான சாம்பியன் ஆப் சாம்பியன் என்கிற பட்டத்தை அரக்கோணத்தை சேர்ந்த அருண்பாண்டியன் என்கிற வாலிபருக்கு வழங்கப்பட்டது. அதற்கான கேடயம் மற்றும் பரிசாக குளிர்சாதனப்பெட்டி வழங்கப்பட்டது. அந்த பரிசினை ஆம்பூர் அதிமுக பிரமுகரும், ஆம்பூர் சக்கரை ஆலை கூட்டுறவு சங்க தலைவர் மதியழகன் வழங்கி பாராட்டினார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments