Skip to main content

ரூ.30 லட்சத்திற்கு கூவி விற்கப்படும் ஏ.பி.ஆர்.ஓ.பதவிகள்..மனக்குமுறலில் மணிமண்டப பொறுப்பாளர்கள்..!!!!!

Published on 12/02/2019 | Edited on 12/02/2019

அரசியல்வாதிகளின் வாரிசுகள், உறவினர்களுக்குத் தான் ஏ.பி.ஆர்.ஓ. எனப்படும் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பதவி.!!  என ரூ.30 லட்சத்திற்கு கூவிக் கூவி விற்கப்படும் அந்தப் பதவிக்கு தகுதி திறமையிருந்தும் நாங்கள் புறக்கணிக்கப்படுகின்றோம் என தங்களது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர் நினைவு மணி மண்டபங்களில் நீண்ட நாட்களாக பொறுப்பாளர்களாகப் பணிபுரிபவர்கள்.

 

 

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களுக்கும், தமிழ் மற்றும் சமுதாயத் தொண்டு புரிந்தவர்களுக்கும் செய்தி மக்கள் தொடர்புதுறை சார்பில் மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 80க்கும் அதிகமான நினைவு மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்போழுது இதில் பொறுப்பாளர்களாகப் பணிபுரிபவர்கள் தங்களது உள்ளக்கிடக்கையை வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளனர். அதிலிருந்து.,

 

 APRO Positions sold for Rs. 30 lakh?

 

" நினைவு மணிமண்டபங்கள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த பொழுது பராமரிப்புக்கான நிதி ஒதுக்கீடு செய்து பராமரிக்கப்பட்டன. ஆனால் முதல்வர் மறைவுக்கு பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை. எல்லா மண்டபங்களிலும் வெண்கலத்தில் சிலைகள் உள்ளன. இதனை பாதுகாக்க போதிய பணியாளர்கள் இல்லை. அனைத்து மண்டபங்களிலும் ஒரு சில இடங்களில் ஆட்கள் நியமிக்கப்படாமல் இரவு நேர காவலர் இன்றி அனாதையாக சிலைகள் உள்ளன. வெளியிடங்களில் உள்ள தலைவர்களின் சிலையை பாதுகாக்க அரசு காட்டும் அக்கரையை மணிமண்டபங்களில் உள்ள சிலைகளை பாதுகாக்க வேண்டும். தியாகிகளுக்கென பல லட்சம் கோடிகளை கொட்டி மணிமண்டபங்களை கட்டும் அரசு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் நிரந்தரமாக எந்த மண்டபத்திற்கும் துப்புறவு பணியாளர்கள் கிடையாது. மாறாக பகுதிநேர துப்புறவு பணியாளர்கள் ஒரு சிலர் வேலை பார்க்கின்றனர் அவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ5 வீதம் மாதம் ரூ 150 வழங்கி வருகிறது. இதை யாராவது ஏற்றுக் கொள்வார்களா.? குறைந்த பட்சம் நாள் ஒன்றுகு ரூ100 வீதம் ரூ 3,000 வழங்க அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

மின்சார கட்டணத்திற்கு மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் கட்ட அரசு கேள்வி கேட்பது இல்லை. துப்புறவு பணியாளர்களை மட்டும் இன்னும் அடிமை தொழிலாக பார்ப்பது சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். பொதுநூலகத்துறையில் அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அங்கு பணியாற்றும் நூலகர் 1 முதல் 3 பருவ பதவி உயர்வு உள்ளது. ஆனால் மண்டபங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு விடுமுறை கிடையாது. மயானத்தை பாதுகாப்பது போல் மண்டபங்களில் அடிமை தொழிலை மேற்கொள்ளும் ஊழியர்களை அரசு கண்டு கொள்வது இல்லை. வருவாய் துறையில் எஸ்.எஸ்.எல்.சி படித்தால் போதும் கோட்டாச்சியர் வரை பதவி உயர்வு உள்ளது. ஆனால் மணிமண்டபங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வழிகாட்டி காப்பாளர் வரை தான் பதவி உயர்வு இல்லை. சர்வீஸ் அடிப்படையில் காப்பாளர் 1 கிரேடு வரை பதவி உயர்வு நூலகத்துறை வழங்குவது போல் வழங்க அரசு முன்வர வேண்டும்.  2008 வரை காப்பாளர்கள் மேற்படிப்பு படித்தால் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகலாம் அதையும் நிறுத்தி விட்டு நேரடி நியமனத்தில் அரசு இறங்கியதால் அதுவும் பறிபோனது. தற்போது ரூ.30 லட்சத்திற்கு தங்களுக்கு வேண்டியவர்களை நியமிக்கின்றனர் அரசியல்வாதிகள்." என்கிற அந்த வாட்ஸ்அப் கடிதம் கூடுதலாக சில கோரிக்கைகளை வைத்துள்ளது.

 

 

 

"பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஒட்டு மொத்த மண்டபங்களை கவனிக்கும் ஒரு ஊழியரை சர்வீஸ் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கலாம். இப்படி பல்வேறு வழிகள் உள்ள நிலையில் மணிமண்டபங்களில் நாள்தோறும் விடுமுறை இன்றி உழைக்கும் ஊழியர்களின் நலனை அரசு கூர்ந்து கவணிக்காமல் மயானத்தை பாதுகாக்கும் ஊழியர்கள் போல் அரசு நடந்து கொள்வதை கை விடுதல் வேண்டும். இந்த துறையில் உள்ள மேல் அதிகாரிகள் பதவிமுதிர்வு அடைந்த பின்பும் மீண்டும் இதே துறையில் பல வருடங்களாக பதவி வகித்து வருகின்றனர். ஆனால் கீழ்மட்ட ஊழியர்களை கண்டுகொள்வதில்லை. இது விஷயத்தில் அரசு மணிமண்டபங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதை அரசாணையாக வெளியிட வேண்டும். சர்வீஸ் அடிப்படையில் 10ம் வகுப்பு முதல் உயர் படிப்பு வரை படித்தவர்களுக்கு காப்பாளருக்கு அடுத்ததாக கிரேடு1, 2, 3 அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க அரசாணையில் வழிவகை செய்ய வேண்டும்" என்கின்றனர்.

 

 

மணிமண்டப ஊழியர்களை அரசு பாதுகாக்குமா?

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார்; இறுதிக்கட்டத்தில் போலீஸ் விசாரணை!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
complaint against Rajendra Balaji Police investigation in the final stage

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இத்தகைய சூழலில் அவர் தலைமறைவானார். அதன்பின்னர் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தற்போது ஜாமீனில் உள்ளார். அதே சமயம் நல்லதம்பி என்பவர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடப்பதாகவும், அதனால் இதனை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று (11.04.2024) நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் முகிலன், “இந்த வழக்கின் புலன்விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி நல்லதம்பியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.