Skip to main content

நந்தனார் பள்ளியில் அரசு தேர்வுகளில் முதன்மை இடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Appreciation for students who topped government exams at Nandanar School

 

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு தேர்வில் முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசளிப்பு மற்றும் சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ‘சுவாமி ஏ.எஸ். சகஜானந்தா பணி நிறைவு பெற்றோர் சமூக அறக்கட்டளை’ சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் குகநாதன் தலைமை தாங்கினார். சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். சமூக அறக்கட்டளையின் ஆலோசகர் சக்கரபாணி மற்றும் தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தனர்.

 

இதில் முதன்மை விருந்தினராகச் சிதம்பரம் காவல்துறை ஏ.எஸ்.பி ரகுபதி மற்றும் சிறப்பு விருந்தினராகச் சிதம்பரம் ஸ்ரீ சண்முக விலாஸ் குழுமத்தின் உரிமையாளர் பொறியாளர் கணேசன் கலந்து கொண்டு, சிதம்பரம் சுற்று வட்டப் பகுதியில் உள்ள ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயின்று அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குச் சான்றுகள் மற்றும் பரிசுகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய சிதம்பரம் ஏ.ஸ்.பி ரகுபதி, மாணவ மாணவிகள் வாழ்வியல் சூழலை அறிந்து கல்வி கற்று அரசின் உயர் பதவிகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் மாணவர்கள் பெற்றோர்கள் படும் துயரங்களை எண்ணி கல்வி கற்க வேண்டும் என்றார். மேலும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் பல்வேறு திறமைகள் உள்ளது. அதனைச் சரியான நேரத்தில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என மாணவர்களுக்கு எழுச்சியுரையாற்றினார். அதேபோல் சிறப்பு விருந்தினர் பொறியாளர் கணேசன், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் கல்வியால் ஒருவர் எவ்வாறு உயர்ந்த இடத்திற்கு செல்வார் என்பது குறித்து மாணவர்களிடம் எடுத்துக் கூறினார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் நடைபெறும் நிகழ்ச்சியில் அரசுத் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் மற்றும் கல்வி கற்கும் செலவுகளைச் சொந்த செலவில் வழங்குவதாக உறுதியளித்தார்.  இதனை அனைவரும் வரவேற்றனர்.

 

இந்நிகழ்ச்சியில் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஹேமலதா, அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மலைராஜ், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் சிவகாந்தி, சுவாமி சகஜானந்தா சமூக அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் பாலையா, இணை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், பொருளாளர் செல்வராஜ், துணைத் தலைவர் விமலக்குமார், துணைச் செயலாளர் காந்திமதி, துணைப் பொருளாளர் நெடுஞ்செழியன், பள்ளியின் விடுதி காப்பாளர் பழனி, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் இதேபோல் மற்ற அனைத்து மாணவர்களும் முதன்மை மதிப்பெண் பெற வேண்டும் எனப் பேசினார்கள். அறக்கட்டளையின் தணிக்கையாளர் விஜயகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

''அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்''-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'Who will go missing will be known after June 4'-Edappadi Palaniswami speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூரில் நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், ''எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அதிமுக என்ற கட்சி அதிக தொண்டர்களைக் கொண்டது. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளனர். எங்களைச் சீண்டி பார்க்காதீர்கள். அப்படி பார்த்தால் எப்படி இருக்கும் என அதிமுக தொண்டர்கள் காட்டுவார்கள்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. அதிமுகவை அழிக்க நினைத்த சிலர் தற்போது பழத்தை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.  உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும். அண்மையில் பார்த்தால் திமுக அயலக அணி துணை அமைப்பாளர் என்ற திமுக நிர்வாகி இரண்டு ஆண்டு காலமாக வெளிநாட்டுக்கு போதைப் பொருளை கடத்தி கொண்டிருக்கிறார். நீங்களே பாருங்கள்'' என முதல்வருடன் ஜாபர் சாதிக் எடுத்த புகைப்படத்தைக் காட்டினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஜாபர் சாதிக் இருக்கும் புகைப்படத்தையும் காட்டினார்.

பின்னர் மீண்டும் பேச தொடங்கிய எடப்பாடி, ''முதலமைச்சரோடு நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். பின்னர் விளையாட்டுதுறை அமைச்சருடன் நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். போட்டோ எடுத்துக் கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் வரும்போது கூட நிறைய போட்டோ எடுத்தாங்க. ஆனால் அவருடைய கட்சி நிர்வாகி, பொறுப்பில் உள்ள நிர்வாகி போட்டோ எடுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துள்ளார்கள். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்திய ஆசாமிக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என மக்கள் கேட்கிறார்கள். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதல்வருக்கும் விளையாட்டுதுறை அமைச்சருக்கும் இருக்கிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'நான் இரவில் படுத்து தூங்கி காலையில் கண்விழித்து பார்க்கும் பொழுது என்னுடைய கட்சிக்காரர்களால் என்ன பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சத்தில் கண் விழிக்கிறேன்' என்கிறார். இதை நான் சொல்லவில்லை திமுக தலைவர் சொல்கிறார். அப்படி என்றால் அந்தக் கட்சியினர் எப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவரே சொல்லிவிட்டார். நாம் சொன்னால் கூட வேண்டுமென்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்துகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் திமுக தலைவரே அவருடைய கட்சிக்காரர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். மக்களுக்கு எதிரான திட்டங்களை பாஜக கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. ஆனால் அதேநேரம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டவும் செய்வோம். எதிர்க்கும் போது எதிர்ப்போம்; பாராட்டும் போது பாராட்டுவோம் என்பதே அதிமுகவின் ஸ்டைல். கூட்டணியை நம்பி அதிமுக தேர்தலைச் சந்திக்கவில்லை. மக்களை நம்பியே இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். கூட்டணியிலிருந்த வரை பாஜகவிற்கு விசுவாசமாக இருந்தோம். தற்பொழுது விலகி விட்டோம். பாஜகவை எதிர்க்கவில்லை என்கின்றனர், அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்'' என்றார்.