தேசிய தரவரிசை பட்டியலில் தமிழக உயர்கல்வி நிறுவனங்கள் முன்னிலை பெற்றுள்ளன. இதன் காரணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில் கிண்டி, ராஜ்பவனில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.