Skip to main content

இணையதளத்தை பார்த்து டார்ச்லைட் செய்த 5 ஆம் வகுப்பு மாணவிக்கு குவியும் பாராட்டுகள்!

Published on 17/01/2019 | Edited on 17/01/2019

 

invention

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மருங்கூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் - ஜமுனா தம்பதியரின் மகள் சுடர் (10). இவர் தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது  பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்கு தெரிந்த புராஜக்ட் வொர்க் செய்து வர வேண்டும் என்று ஆசிரியர் கூறியுள்ளார். அதற்காக அம்மாணவி தனது அப்பாவின் மொபைலின் மூலம் இணையளத்தின் வழியாக, ப்ராஜெக்ட் வொர்க் குறித்து தேடி உள்ளார். அப்போது எளிமையாக பென்சில் மூலம் டார்ச் லைட் செய்வது குறித்து, வீடியோவை பார்த்து, அதற்கு தேவையான பொருட்களான பென்சில், பிளேடு, பேட்டரி, ஒயர் உள்ளிட்டவைகளை, அவரது அப்பாவின் உதவியுடன் வாங்கி உள்ளார். அவற்றினை கொண்டு டார்ச் லைட் செய்து எரிய வைத்துள்ளார். 

 

invention

 

 "டார்ச் லைட் செய்யும்  முயற்சியில் ஈடுப்பட்ட போது கடினமாக தெரிந்ததாகவும்,  அதனால் வீடியோவை பார்த்துக் கொண்டே செய்ததாகவும் கூறிய சுடர்,  இதேபோல்  பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும் என்றும், தன்னை போல் அனைவரும் ஊக்கத்துடன் செயல்பட்டால், வெற்றி பெறலாம் என்று கூறினார்.

 

டார்ச் லைட்டை முழுவதுமாக செய்து முடித்த பின், பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் காட்டிய போது, மாணவ, மாணவிகள், தலைமையாசிரியர் உட்பட அனைவரும் வெகுவாக பாராட்டியுள்ளனர். 

 

மேலும் சிறு வயதில் விசித்திரமான முயற்சியில் ஈடுப்பட்டதற்கும், சிறப்பாக மென்மேலும் பல விதமாக செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிய பள்ளி மாணவி!

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
schoolgirl who worked as a conductor in a government bus

கர்நாடக மாநிலம் அப்சல்பூர் கட்டஹாரா கிராமத்தைச் சேர்ந்த வித்யா 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவி வித்யாவிற்கு பேருந்து நடத்துநராகப் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவி வித்யா தன்னுடைய நடத்துநர் ஆசை குறித்து போக்குவரத்து பணிமனை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மாணவி வித்யாவின் ஆசையைக் கேட்ட அதிகாரிகள் அதனை நிச்சயம் நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளனர். முதலில் மாணவி வித்யாவிற்கு எவ்வாறு பயணச்சீட்டு கொடுக்க வேண்டும் என்று பயிற்சி கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவி வித்யா கட்டஹாரா வரை செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணி செய்ய அனுமதி அளித்தனர். 

பின்னர், அதன்படி அப்சல்பூரில் இருந்து கட்டஹாரா வரை செல்லும் அரசுப் பேருந்தில் மாணவி வித்யா நடத்துநராகப் பணி செய்தார். அவருடன் நடத்துநரும் இருக்கையில், பயணிகளிடம் எங்கு செல்கிறார்கள் என்று கேட்டு, உரிய பயணச்சீட்டை வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் மாணவிக்கும், அவரின் ஆசையை நிறைவேற்றிய போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இணையவாசிகள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். 

Next Story

விடுமுறைக்கு வந்த சிறுமியை தவறான பாதைக்கு உட்படுத்திய அத்தை; போக்சோவில் நடவடிக்கை எடுத்த போலீஸ்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
 The aunt who took the vacationing girl astray; Police take action in POCSO

சென்னையில் சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை உள்ளிட்ட மூன்று பெண்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் செய்த சோதனைகளின் அடிப்படையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும், சிறுமி கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு மருத்துவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்தாண்டு காலாண்டு தேர்வு விடுமுறையில் அத்தை வீட்டிற்கு வந்திருந்த சிறுமியை அத்தை மற்றும் மூன்று பெண்கள் சேர்ந்து பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமி கர்ப்பம் ஆனது தெரியவந்தது. இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை மற்றும் மூன்று பெண்களை கோயம்பேடு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.