Appointment of Special Officers for Police Commissions!

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளின் காவல் ஆணையரகங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி. ரவி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆவடி மாநகர காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment