ADVERTISEMENT

கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு இடைக்கால தடை... நீதிமன்றம் உத்தரவு

12:20 PM Apr 09, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்மண்டல பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரும் 19ஆம் தேதி பதவியேற்க இருந்த நிலையில், அவரது நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

‘சுற்றுச்சூழல் சார்ந்த நிர்வாகத்தில் போதிய அனுபவம் இல்லாதவர் கிரிஜா வைத்தியநாதன். எனவே அவரை அந்தப் பொறுப்பில் நியமிக்க தடை விதிக்க வேண்டும்’ என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில், கிரிஜா வைத்தியநாதன் பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக பதவியேற்க இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT