Skip to main content

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் சேர விண்ணப்ப விநியோகம் தொடங்கியது!

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ - (தொழிலாளர் மேலாண்மை) ,எம்.ஏ - ( தொழிலாளர் மேலாண்மை) பட்டப்படிப்புகள் மற்றும்  பி.ஜி.டி.எல்.ஏ ( தொழிலாளர் நிர்வாகத்தில் முதுகலை மாலை நேர பட்டயப்படிப்பு ) , D.L.L & A.L . (தொழிலாளர் சட்டங்களும் , நிர்வாகவியல் சட்டமும் ) வார இறுதி பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றனர். இதே போல் பி.ஏ (தொழிலாளர் மேலாண்மை) , எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை) உள்ளிட்ட படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பி.ஜி.டி.எல்.ஏ மற்றும் டி.எல்.எல் உள்ளிட்ட படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைப்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

application



பி.ஏ (தொழிலாளர் மேலாண்மை) , எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ ஆகி பட்ட மற்றும் பட்டயப்படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வி தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர்கள் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது . இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் தற்போது மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து இக்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு தொழிற்சாலை நிறுவனங்கள் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.   

தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் அலுவலர் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு மேலே குறிப்பிட்ட கல்வி தகுதி முக்கியம் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இத்தகைய கல்வியை பயில விருப்பமுள்ள +2 முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பிற்கும் , ஏதேனும் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் முதுகலைப்பட்ட மற்றும் பட்டயப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண்கள் மற்றும் அரசு விதிகளின் படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பங்கள் வழங்கும் தேதி : 15/04/2019 .  பி.ஏ (எல்.எம்) பூர்த்திச்செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும் இறுதிநாள் : 30/05/2019 மாலை 5.00 மணி வரை. எம்.ஏ/ பி.ஜி.டி.எல்.ஏ/ டி.எல்.எல் பூர்த்திச்செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும் இறுதிநாள் : 28/06/2019 மாலை 5.00 மணி வரை.  விண்ணப்ப கட்டணம் (நேரில்) - ரூபாய். 200. (SC/ST) விண்ணப்ப கட்டணம் (சாதிச்சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் ) - ரூபாய் 100.

தபால் மூலம் விண்ணப்பத்தை பெற விரும்புவோர்கள் (விண்ணப்ப கட்டணம் + தபால் கட்டணம் ரூபாய் 50யை) வங்கியில் செலுத்தி வரைவோலை "The  Director ,Tamilnadu  Institute Of Labour Studies , Chennai -600005" என்ற பெயருக்கு வங்கி வரைவோலை எடுத்து அனுப்பி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு : 
ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை),
முனைவர். இரா.ரமேஷ்குமார் , உதவி பேராசிரியர் ,
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் ,
No 5 ,காமராசர் சாலை , 
சென்னை - 600 005.
Mobile No : 98841- 59410.
Lane Line No: 044 - 28440102 ,
 044- 28445778 , 
e-mail : tilschennai@tn.gov.in.


பி.சந்தோஷ், சேலம்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.