Skip to main content

ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல்

Published on 09/11/2018 | Edited on 09/11/2018
மு

 

சர்கார் பட பிரச்சனையினால் அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

 

நள்ளிரவில் முருகதாஸ் வீட்டிற்கு காவல்துறையினர் சென்ற நிலையில் இன்று முன் ஜாமீன் கேட்டு அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வர உள்ளது.

 

சர்கார் படத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்தும் காட்சிகள் இருப்பதால் அப்படத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.   சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருவதால் சர்ச்சை காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் முடிவு செய்து இருப்பதாக தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில், படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்வதற்காக காவல்துறை அவரது வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது.  இது குறித்து இயக்குநர் முருகதாஸ்,  ‘’சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள எனது வீட்டிற்கு வந்த காவல்துறையினர் பலமுறை கதவை தட்டினர்.   நான் வீட்டில் இல்லாததால் திரும்பி சென்றுவிட்டனர்’’என்று ட்விட்டர் மூலம் விளக்கம் அளித்திருந்தார். 

இதையடுத்து இன்று காலையில்,  முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் முருகதாஸ்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்கார் பட விவகாரம்; ஏ.ஆர். முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு...

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

High Court Cancelled case on Murugadoss basses on Supreme Court Order

 

சர்கார் பட விவகாரம் தொடர்பாக  இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசையும், அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டன. இதனால் அரசின் திட்டங்களைத் தவறாகக் குறிப்பிடுவதாக படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் தேவராஜன் என்பவர் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கில் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், தனக்கு எதிரான புகார், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அளிக்கப்பட்டதாகவும், அதனால் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

 

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவில், திரைப்படம் தணிக்கை முடிந்த பிறகு தான் வெளியிடப்பட்டுள்ளது. தணிக்கை முடிந்த திரைப்படம் குறித்து தனி நபர் அல்லது அரசு கேள்வி எழுப்ப அல்லது வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சூட்டிகாட்டிய நீதிபதி, அரசியலமைப்பு வழங்கிய பேச்சுரிமை எதிராகப்  பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்வதாக தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்.

 


 

Next Story

விநியோகிஸ்தர்களை காப்பாற்றாதவர் எப்படி தமிழகத்தை காப்பாற்றுவார்- டி.ஆர்.ராஜேந்தர் கேள்வி!!  

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

படத்தினை வாங்கி நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களை காப்பாற்றாதவர் எப்படி தமிழகத்தை காப்பாற்றுவார் என திரைப்பட விநியோகிஸ்தர் சங்க தலைவர் டி.ஆர்.ராஜேந்தர் மறைமுகமாக நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்துள்ளார். 

 

darbar issue-TR Rajender Question !!

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியான படம் தர்பார். பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. 

இந்நிலையில் இந்த படம் போதுமான பணத்தை வசூலீட்டவில்லை என்று படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். இழப்பீட்டுக்காக அவர்கள் இயக்குனர் முருகதாஸை சந்திக்க முயற்சி செய்தபோது அவர் அனுமதிக்கவில்லை, அதேபோல ரஜினிகாந்தும் நேரில் பார்த்து பேச அனுமதிக்கவில்லை என்று விநியோகஸ்தர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பான புகார் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும், நடிகரும், இயக்குனருமான டி.ஆர்.ராஜேந்தரிடன் செல்ல,  இதுகுறித்து அதிருப்தி தெரிவித்த டி.ஆர் ராஜேந்தர், விநியோகிஸ்தர்கள் மீது காவல்நிலையத்தில் முருகதாஸ் புகார் அளித்துள்ளது வருத்தம் அளிக்கிறது. இயக்குனர் முருகதாஸ் தாமாக முன்வந்து வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததோடு, நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களை காப்பாற்றாதவர் எப்படி தமிழகத்தை காப்பாற்றுவார் என கேள்வி எழுப்பி நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்தார்.