Advertisment

அன்வர் ராஜா திடீர் நீக்கம் - ஜெயக்குமார் வரவேற்பு!

g

அதிமுகவிலிருந்துஅன்வர் ராஜாநீக்கப்பட்டது சரியான ஒன்று தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

அதிமுகவில் ஒன்பது மாவட்டஉள்ளாட்சித்தேர்தலில் அதிமுக அடைந்தபடுதோல்விக்குப்பிறகு சிலர் மீண்டும் சசிகலாவைஅதிமுகவுக்குகொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறார்கள். குறிப்பாக இந்த விவகாரம்தொடர்பாகப்பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், சசிகலா இணைப்புதொடர்பாகக்கட்சி நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு செய்வார்கள் என சில வாரங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார். அப்போதே அவருக்கு எதிராக சில முன்னாள் அமைச்சர்கள் பேசினார்கள். குறிப்பாக ஜெயக்குமார், சசிகலா நீக்கப்பட்டுவிட்டார்,அதைப்பற்றி யாரும் பேசக்கூடாது என்றார். இந்நிலையில் சசிகலா இணைப்புபற்றித்தொடர்ந்து தொலைக்காட்சியில் பேசி வந்த முன்னாள் அதிமுக மூத்த தலைவர்அன்வர் ராஜாதற்போதுஅதிமுகவிலிருந்துநீக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜெயக்குமார், "அதிமுகவிலிருந்துகொண்டே கட்சியை விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.அன்வர் ராஜாநீக்கம் என்பது சரியான முடிவுதான்" என்றார்.

D JAYAKUMAR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe