Skip to main content

களத்தில் ஆட்டம் காட்டிய அனுராதா எஸ்.ஐயின் சின்ன ராவணன்

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

 Anuradha si bull won first prize best bull jallikattu competition held Pudukottai.

 

2020 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அத்தனை பேர் கவனத்தையும் ஈர்த்து ஒட்டுமொத்த மீடியாக்களின் பார்வையையும் திரும்பிப் பார்க்க வைத்த காளை ராவணன். புதுக்கோட்டை நெம்மேலிப்பட்டி பளு தூக்கும் வீராங்கனை அனுராதா எஸ்.ஐக்கு பரிசாக கிடைத்த ராவணன் தான் அந்தக் காளை. முதல் பரிசு ராவணனுக்கு கிடைக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாம் பரிசு கிடைத்தது.

 

அதன் பிறகு பல வாடிவாசல்களில் நின்று விளையாடிய ராவணன் கடந்த 2021ம் ஆண்டு ஒரு ஜல்லிக்கட்டில் நின்று விளையாடியதோடு வெளியேறிய ராவணனை உரிமையாளரும் பிடிக்க முடியாமல் தேடியபோது சில நாட்களுக்குப் பிறகு ஒரு இடத்தில் கரையான் புற்றை உடைத்த நிலையில் பாம்பு கடித்து இறந்து கிடந்தது. இந்த தகவல் ஒலிம்பிக் போட்டிக்கான பளு தூக்கும் பயிற்சியில் இருந்த அனுராதாவிற்கு சொன்னபோது கதறி அழுததோடு உடனே ராவணனை காண ஊருக்கு கிளம்பி வந்து ராவணன் புதைக்கப்பட்ட இடத்தில் விழுந்து கதறி அழுத பிறகே வீட்டிற்குச் சென்றார்.

 

ராவணன் இழப்பு எங்களுக்கு பேரிழப்பு அந்த இடத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது. ஆனால் இனிமேல் அத்தனை காளைகளையும் ராவணன் பெயரிலேயே வாடியில் விடுவோம். வெற்றி வாகை சூடி வரும். அதற்காக அண்ணன் மாரிமுத்துவும் அம்மாவும் காளைகளுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்கள் என்றார்.

 

 Anuradha si bull won first prize best bull jallikattu competition held Pudukottai.

 

இந்த நிலையில்தான் இன்று வியாழக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் முக்காணிப்பட்டியில் தேவாலய பொங்கல் விழா ஜல்லிக்கட்டை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்த வாடியில் ராவணன் தம்பியாக களமிறங்கிய  'ராவணன் 2' சீறிப்பாய்ந்து வந்ததும் அத்தனை வீரர்களும் பேரிக்காட்களில் ஏறிக் கொண்டனர். வீரர்களால் கிட்டே நெருங்க முடியவில்லை. வீரர்கள் மீதான கோபத்தால் வரவேற்பிற்காக கட்டியிருந்த வாழை மரங்களை கிழித்து ஆட்டம் காட்டியது. சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக நின்று விளையாடிய சின்ன ராவணனுக்கு பரிசுகள் குவிந்தது. கடைசி வரை பிடிக்க முடியவில்லை. காளை வெற்றி பெற்றதாக அறிவித்து வெளியேற்றப்பட்டது. அப்போதே 'சிறந்த காளை என எழுதுங்கப்பா' என்று மைக்கில் விளம்பரம் செய்தனர். அனைத்து காளைகளும் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் இறுதியாக எஸ்.ஐ அனுராதாவின் 'ராவணன் 2' சிறந்த காளையாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு முதல் பரிசு வழங்கப்பட்டது. அனுராதா எஸ்.ஐயின் பெயரில் காளைகள் களமிறங்கினாலும் அவரது அண்ணன் மாரிமுத்துவே அத்தனை பயிற்சிகளும் கொடுத்து வளர்த்து வருகிறார்.

 

அதே போல 20 காளைகளை கட்டித் தழுவிய வடவாளம் கலியுக மெய்யர் குழுவைச் சேர்ந்த மாத்தூர் கவாஸ் சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வு செய்யப்பட்டு மோட்டார் சைக்கிள் பரிசு வழங்கப்பட்டது. கயிறுகளுடன் அவிழ்க்கப்பட்ட காளைகளுக்கு பரிசுகள் தவிர்க்கப்பட்டது. புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி ஜல்லிக்கட்டை நடத்தி முடித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.