Skip to main content

சமூகவலைதளத்தில் திருமூர்த்தியைத் தொடர்ந்து கர்நாடக விவசாயி வைரல்...!

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

உலகத்தில் மிகப்பெரிய கொடுமை எது வென்றால் ஒருவனின் திறமையை அங்கீகரிக்காமல் இருப்பதும், அதை புறக்கணிப்பதும்தான். முன்பெல்லாம் திறமையை வெளிப்படுத்துவது என்பது வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாக இருந்தது. கடைகோடியில் வாழும் சாமானியனுக்கு அது எட்டா கனியாகவே தோன்றியது.

 

 Anupam Kher shared the video of the singing farmer



ஆனால் மக்கள் சமூகத்தின் மீது சமூகவலைதளம் ஏற்படுத்திய தாக்கம் அதை உடைத்தெரிந்தது. வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் அடித்தட்டில் வாழும் திறமையாளர்களின் மீது வெளிச்சம் பட்டது. அப்படித்தான் தமிழ்நாட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி, டி.இமான் இசையில் பாடும் வாய்ப்பை பெற்றார். ரயில்களில் பாடி வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த ரானு மரியா மோன்டல் புகழின் உச்சிக்கு சென்றார்.

 

 

 Anupam Kher shared the video of the singing farmer



இதேபோல் கர்நாடகவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பாடும் பாப் பாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பாலிவுட் மூத்த நடிகர் அனுபம் ஹேர், தனது டிவிட்டரில் பதிவிட்டு, "கர்நாடகாவை சேர்ந்த இந்த விவசாயிக்கு ஆங்கிலம் சரளமாக பேசத் தெரியாது என்று உறுதியாக தெரிகிறது. ஆனால் அவர் பாப் பாடகர் ஜஸ்டின் பீபரை பாடும் முறையும், மனநிலையும் ஆர்வத்தோடு புதிய விஷயத்தை கற்றுக்கொண்டு அதை அனுபவபூர்வமாக வெளிகாட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

விபரீத இன்ஸ்டா ரீல் இளைஞர்கள் கைது; போலீசார் எச்சரிக்கை

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
nn

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவைகுளத்தில் விபரீதமாக மண்ணுக்குள் குழிதோண்டி அதனுள் இளைஞரை தலைகீழாக புதைத்து சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்த போலீசார் ரஞ்சித் பாலா அவரது நண்பர்கள் சிவக்குமார், இசக்கி, ராஜா ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.