ADVERTISEMENT

கரோனா அச்சுறுத்தல்..! அமைச்சர்களின் கார்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி..! (படங்கள்)

04:09 PM Mar 16, 2020 | george@nakkheeran.in

ADVERTISEMENT

சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 6518 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1,69,610 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 110 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

இன்னிலையில் தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் கண்காணிக்கப்படுவதோடு கிருமி நாசினி தெளிக்கப்படுகிரது. தமிழக சட்டப்பேரவையிலும் கரோனா அறிகுறி இருக்கிறதா என பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. மேலும் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கார்களில் கரோனாவில் இருந்து பாதுகாப்பதற்காக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT