Skip to main content

"ம.தி.மு.க. மாணவர் அணி சார்பில் நீட் எதிர்ப்பு கருத்து அரங்கம்"- வைகோ எம்.பி. அறிக்கை!

Published on 25/09/2021 | Edited on 26/09/2021

 

 

"Anti-Need Forum on behalf of MDMK Student Team" - Vaiko MP Report!


ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இன்று (25/09/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவக் கல்வியில் நீட் தேர்வை, ஒன்றிய அரசு திணித்த நாள் முதல், தமிழ்நாட்டில் அரியலூர் மாணவி அனிதா முதல் சௌந்தர்யா வரை 16 மாணவக் கண்மணிகள், தங்கள் உயிர்களைப் போக்கிக் கொண்டுள்ளனர். எனவே, நீட் தேர்வு கூடாது என தி.மு.க.அரசு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

 

நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவிடம் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கருத்து அளித்தனர். அவற்றுள் 80 விழுக்காட்டினர், நீட் தேர்வுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

 

அதன் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன், நீட் தேர்வு கூடாது; அது சமூகத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்பதை விளக்கி, அரசுக்கு அறிக்கை அளித்து இருக்கின்றார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

1. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், பல்வேறு பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால், நீட் தேர்வு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்துகின்றார்கள். எனவே, நீட் தேர்வு, கல்வித்துறையில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கின்றது.

 

2. நீட் தேர்வு, தனியார் பயிற்சி மையங்களை ஊக்குவிக்கின்றது. அவர்கள் இலட்சக்கணக்கான ரூபாய் கல்விக் கட்டணக்கொள்ளை நடத்த வழிவகை செய்கின்றது. தனியார் பள்ளிகளில், 11 ஆம் வகுப்பு முதலே நீட் பயிற்சிகளைத் தொடங்கி விடுகின்றார்கள்.

 

3. அரசுப்பள்ளிகளில் படிக்கின்ற அடித்தட்டு, ஏழை, எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவை, நீட் தேர்வு தகர்த்துத் தரைமட்டம் ஆக்குகின்றது. பட்டியல் இனம் மற்றும் பழங்குடி மக்களுக்கான வாய்ப்புகளை முற்றுமுழுதாகத் தடை செய்கின்றது.

 

4. 2010-11 ஆம் கல்வி ஆண்டில், மாநிலக் கல்வித் திட்டத்தில் படித்த 2332 பேருக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்தது. சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 14 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்தது. நீட் தேர்வு அறிமுகம் ஆன பிறகு, சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 1604 பேர் மருத்துவக் கல்வியில் சேர்ந்து இருக்கின்றார்கள் எனக் குறிப்பிட்டு இருக்கின்றார்.

 

எனவே, நீட் தேர்வுக்கு எதிரான விழிப்புணர்வை, நாடு முழுமையும் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கின்றது. அதற்காக, ம.தி.மு.க.வின் மாணவர் அணி சார்பில், சென்னை, திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய நான்கு மையங்களில், நீட் தேர்வுக்கு எதிரான கருத்து அரங்கம் நடைபெறும். மாநில மாணவரணிச் செயலாளர் பால.சசிகுமார் ஒருங்கிணைப்பில் மாநில துணைச்செயலாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்"  இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“மத்தியில் நல்லாட்சி அமைய துரை வைகோவுக்கு வாக்களியுங்கள்” - அமைச்சர் கே.என்.நேரு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vote for Durai Vaiko for good governance in Madhya Pradesh Minister KN Nehru

திருச்சி பாராளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரைவைகோ, நேற்று காலை ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சித்தாநத்தத்தில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.  தொடர்ந்து சமுத்திரம், மறவனுார், கண்ணுடையான்பட்டி, முத்தப்புடையான்பட்டி, மொண்டிப்பட்டி, பெரியப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், மாலை ஸ்ரீரங்கம் மேலுார், மூலத்தோப்பு, வடக்குவாசல், கீழவாசல், அம்பேத்கர்நகர், நெல்சன் ரோடு மற்றும் அந்தநல்லுார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளிலும் நேற்று வீதி, வீதியாக ஓட்டு சேகரித்தார்.

அமைச்சர் கே.என்.நேரு, பொதுமக்களிடையே ஓட்டு சேகரித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசுகையில்,‘‘துரை வைகோ எம்பியாக வெற்றி பெற்றால் மத்திய அரசில் இருந்து அனைத்து நன்மைகளும் திருச்சிக்கு கிடைக்கும். இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மணப்பாறை சிப்காட் உணவுப்பூங்கா, பாதுகாப்பு தளவாட தொழிற்சாலை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போதுள்ள மத்திய அரசு உதவ மறுப்பதால் இத்திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை. ஐஎன்டிஐஏ கூட்டணி வெற்றி பெற்றால், இந்த திட்டங்கள் நமக்கு வந்து சேரும். பாஜ அரசு 100 நாள் வேலை திட்டத்தை 30 நாளாக குறைத்துவிட்டது. எனவே, மத்தியில் நல்லாட்சி அமைய துரை வைகோ வெற்றி பெற, தீப்பெட்டி சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்’’, என்றார்.

பிரச்சாரத்தில் வேட்பாளர் துரை வைகோ பேசுகையில்,‘‘இந்த தேர்தல் டில்லியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், வரக்கூடாது என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். ஸ்ரீரங்கத்துக்கு உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நான் வெற்றி பெற்றால், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் வகையிலான திட்டங்களை செயல்படுத்துவேன். கடந்த 3 ஆண்டுகளில் ஸ்ரீரங்கம் நகரத்துக்கு தேவையான புதிய பஸ் நிலையம், புதிய சாலைகள், ரூ.138 கோடி செலவில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், காவிரியின் குறுக்கே புதிய பாலம் திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.

மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை முழுமையாக வழங்காததால் மேலும் பல திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. இந்நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ராகுல் காந்தி பிரதமர் ஆனால்  தமிழகத்திற்கு உரிய நிதி கிடைக்கும். அதன்மூலம் ஸ்ரீரங்கம் உட்பட தமிழகத்திற்கான நிதியை பெற்று திட்டங்களை செயல்படுத்தலாம். கல்விக் கடன், பயிர்க்கடன் ரத்து என பல்வேறு வாக்குறுதிகளை இந்தியா கூட்டணி வாக்குறுதிகளாக அளித்துள்ளது. எளிய மக்கள் எளிதில் அணுகும் எளிமையான எம்பியாக, தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எம்பியாக, ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் குரலாக லோக்சபாவில் ஒலித்து சிறந்த எம்பியாக செயல்படுவேன். அதற்கு எனக்கு ‘தீப்பெட்டி’ சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்’’ என்றார்.

பிரச்சாரத்தில், திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ பழனியாண்டி, மேயர் அன்பழகன், பகுதி செயலாளர் ராம்குமார், மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்ட திமுக, மதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.