Skip to main content

போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு! 

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

கடலூர் மாவட்டம்  பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் ஜி.பூவராகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் ஏ.கே சமூக சேவை விழிப்புணர்வு இயக்கம் - போதை இல்லா உலகம் இந்தியா அமைப்பு சார்பில் போதை பொருட்களினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விளக்க மளிக்கப்பட்டது.  


மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்கள் உயர்கல்வி பெறுவதன் அவசியம் குறித்தும், போதை பொருட்களால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு உரையாற்றினார். எ.கே சமூக  சேவை அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் அகிலன் கலந்து கொண்டு போதை மருந்துகள், கஞ்சா, கோகைன் மற்றும் போலி மாத்திரைகள் மூலமாக மனித சமுதாயத்திற்கு ஏற்படக்கூடிய தீமைகள் பற்றியும், மாணவர்களின் உடல் நலத்திற்கு ஏற்படக்கூடிய தீமைகள் பற்றியும் கருத்துரை வழங்கினார்.   

 Anti-Drug Awareness PROGRAM CUDDALORE


மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் அதிகாரி கதிரவன் மாணவ- மாணவிகளிடம் போதைப்பொருட்களின் தீமைகளையும், எய்ட்ஸ் நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1500 மாணவர்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்த கையேடுகள் வழங்கப்பட்டன. இதேபோல் புதுச்சேரியில் போதைப்பொருட்கள் குறித்த புகார்கள் காவல்துறைக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'புதுச்சேரி வடக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் உத்தரவுபடி லாஸ்பேட்டை பகுதியில் கஞ்சா  உபயோகப்படுத்தும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் விதமாக லாஸ்பேட்டை காவல் நிலையம் மற்றும் புறநகர் குடியிருப்பு காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தை சுற்றி இருக்கின்ற இடங்கள், விமான நிலையம் அருகில் உள்ள பகுதிகள், குறிஞ்சி நகர் பூங்கா, கிழக்கு கடற்கரை சாலை, ஆடுகளம், நாவர்குளம், விமானதளம் பின்புறம் போன்ற இடங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வெளியே இருந்து வரும் இளைஞர்கள் கஞ்சா புகைப்பதாக ஒரு சில தகவல்கள் வருகின்றன. 

 Anti-Drug Awareness PROGRAM CUDDALORE


லாஸ்பேட்டை குற்றப் பிரிவு போலீசாரும், ரோந்து காவலர்களும் மேற்சொன்ன இடங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பொது மக்கள் மேற்சொன்ன இடங்களை தவிர்த்து வேறு எங்கும் இளைஞர்கள் கஞ்சா பிடிப்பதாக தெரிய வருமாயின் கீழ்க்கண்ட கைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு (8056661383, 8680868953) லாஸ்பேட்டை காவல் நிலையம் சார்பாக தங்களை கேட்டுக்கொள்கிறோம். மேலும் கஞ்சா இல்லாத புதுச்சேரி மாநிலத்தை உருவாக்க பொதுமக்களும் காவல்துறையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.