ADVERTISEMENT

எம்.ஆர். விஜயபாஸ்கர் விவகாரம்: மீண்டும் சோதனை!

02:24 PM Jul 27, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு சோதனை செய்தார்கள். சென்னையில் உள்ள அவர் வீட்டிலும், கரூரில் 20 இடங்களிலும் நடைபெற்ற இந்த சோதனையில், 50 லட்சத்துக்கும் அதிகமான பணத்தைப் பறிமுதல் செய்தனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்று எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இந்த சோதனை நடைபெற்றது. இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவராக கருதப்படும், போக்குவரத்துத்துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட தனியார் நிறுவனத்தின் ஆலோசகரான ரவி என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்துவருகிறார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT