வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரை அடுத்து கடந்த சில மாதங்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இதுவரை தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அதிமுக முன்னணி தலைவர்கள் 5 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்துள்ளனர்.
கடந்த 20ம் தேதி காலை முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீடு உள்ளிட்ட அவருக்குச் சொந்தமான 57 இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி 1.60 கோடி அளவிலான ரொக்கப்பணத்தை கைப்பற்றினார்கள். இந்நிலையில், அதிமுக பெரியநாயக்கன் பாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயராமன் மற்றும் அவரது மனைவி கீர்த்தி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.