ADVERTISEMENT
ADVERTISEMENT
முன்னாள் அமைச்சர் எஸ்.பி். வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வேலுமணி மீது தொடர்ந்து புகார் வந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவை மாநகராட்சி திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தத்தில் ரூ. 346 கோடி ஊழல் செய்துள்ளதாக புகார் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கோவை குனியமுத்தூரில் உள்ள வேலுமணியின் வீடு, சென்னை எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது அறை உள்ளிட்ட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள்.
Show comments