Advertisment

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள இச்சிற்பத்தை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநர் கந்தசாமி மணல் பார்வையிட்டார். இதனைக் கடற்கரைக்கு வந்த சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.