காஞ்சிபுரம் மாநகராட்சியின் முன்னாள் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் ஷியாமளா என்பவர் நகரமைப்பு பிரிவு அலுவலர் அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் ஷியாமாள வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.