Skip to main content

விவசாயிடம் லஞ்சம் வாங்கிய அலுவலரை சிறையில் அடைத்த லஞ்ச ஒழிப்புத்துறை!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021
Anti-bribery department jails officer who took bribe from farmer

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது திருநாவலூர். இங்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல்கொள்முதல் நிலையத்திற்கு அப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை நேரடியாக கொண்டுவந்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அவியனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் தனது வயலில் விளைந்த 600 மூட்டை நெல்லை திருநாவலூர் நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தார். இதுகுறித்து கொள்முதல் நிலைய இளநிலை உதவியாளர் குணசேகரனிடம் தமது நெல்லை விலைக்கு எடைபோடுவது சம்பந்தமாக கேட்டுள்ளார்.

 

அதற்கு குணசேகரன் ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் வீதம் 600 முட்டைக்கும் சேர்த்து மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் உடனடியாக நெல்லை கொள்முதல் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதற்கு முன்பணமாக பத்தாயிரம் ரூபாய் பணத்தைகொடுத்துள்ளார் ஏழுமலை. மேலும் 20 ஆயிரம் பணம் கேட்டு குணசேகரன் நச்சரிப்பு செய்து வந்துள்ளார். இதனால் மனம் வேதனைப்பட்ட ஏழுமலை இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசிடம்   சென்று புகார் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பெயரில் ரசாயனம் தடவிய பணம் இருபத்தி இரண்டாயிரத்தை குணசேகர் இடம் ஏழுமலை கொள்முதல் நிலைய வளாகத்தில் வைத்துகொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக குணசேகரனை பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த ஒழிப்புத்துறை போலீசார் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறைக்கு கொண்டு அடைத்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.