Published on 27/11/2020 | Edited on 27/11/2020

தமிழக எம்.பிக்களின் கடிதங்களுக்கு மத்திய அமைச்சர்கள் இந்தியில் பதில் அளிப்பதை எதிர்த்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழக்குத் தொடர்ந்துள்ளார். தமிழக எம்.பிக்களுக்கு மத்திய அரசு அனுப்பும் கடிதங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.