ADVERTISEMENT

சாத்தான்குளம் காவல்நிலைய விசாரணையில் உயிரிழந்த மற்றொருவர்... சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற்றம்!

03:22 PM Jul 21, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கு ஏற்கனவே சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. ஐந்து காவலர்கள் சி.பி.ஐ. அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு பின்னர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் மூன்று காவலர்களை, இன்று சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் அதே சாத்தான்குளம் காவல்நிலையத்தில் காவல்துறையினர் காவலில் வைத்து விசாரித்தபோது மகேந்திரன் என்பவர் உயிரிழந்த வழக்குத் தற்போது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT