Skip to main content

கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ‘இன்னொரு’ முகம்!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

கே.டி.ராஜேந்திரபாலாஜி.. அதிரடி கிளப்பும் அரசியல்வாதி என்ற முறையில் எப்படியோ? அமைச்சர் என்ற வகையில் எப்படியோ? மதம் சார்ந்த சர்ச்சை கருத்துகளைப் பேசுவதில் எப்படியோ? ஆனால்.. உரிய நேரத்தில் சக மனிதர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில்,  தனித்தன்மை மிக்கவராக இருக்கிறார். ‘உதவாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்’ என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார், கே.டி.ராஜேந்திரபாலாஜி.

 

another one face of minister rajendarabalaji

 

பயணத்தின்போது  அடித்தட்டு மக்களைச் சந்திப்பதையும்,  அவர்களின் தேவையறிந்து ஏதாவது தருவதையும் வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். உதவி கேட்டு வருபவர் எந்தக் கட்சி என்றெல்லாம் பார்க்கவே மாட்டார். உதாரணத்துக்கு ஒரு சம்பவம். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அந்தத் தலைவர், கலைஞர் வரையிலும் நெருங்கிய நட்பு வைத்திருந்தவர். அரசியலை வைத்து சம்பாதிக்காதவர். எதற்காகவும் யாரிடமும் போய் நிற்காதவர். முதுமையின் காரணமாக உடல் நலிவுற்றிருந்த அவர்,  பொருளாதார வசதியின்மையால், உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியவில்லை. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட கே.டி.ராஜேந்திரபாலாஜி, உடனடியாக அவருக்கு உதவினார். அவரிடம் “அய்யா.. நீங்க அந்தக் காலத்துல மேடையில பேசுவீங்க. நான் தரையில உட்கார்ந்து கைதட்டி உங்க பேச்சை கேட்டிருக்கேன். கட்சி கிடக்கட்டும்யா கட்சி. உங்களை எப்பவும் நான் மதிக்கிறவன்.” என்று கூற, அந்தத் தலைவருக்கு கண் கலங்கிவிட்டது.

 

another one face of minister rajendarabalaji

 

இதய அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ உதவிகளுக்காக நிதி கேட்டு தன்னைச் சந்திக்க வருபவர்களை, மதுரையிலுள்ள அந்த பிரபல மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது அவரது வழக்கம். சாலையோரம் கொய்யாப்பழம் விற்கும் மூதாட்டிகளிடம் 10 ரூபாய்க்கு பழம் வாங்கிவிட்டு, 1000 ரூபாய் கொடுத்து அவர் மகிழ்வதெல்லாம் சகஜம். உலக அளவில் மதிக்கப்படும் தன்னலமற்ற அந்த ஆன்மிகப் பெருமாட்டியை ஒருமுறை சந்தித்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, “அம்மா.. உங்க பெயர்ல முதியோருக்கான ஆசிரமம் பல ஊர்ல இருக்கிறத நான் பார்த்திருக்கேன். ரொம்ப நல்ல காரியம் பண்ணுறீங்க. நானும் அந்தமாதிரி ஒரு ஆசிரமம் நடத்தணும்னு நினைக்கிறேன். நீங்கதான் வழிகாட்டணும்.” என்றிருக்கிறார். அந்த அம்மா “தமிழ்நாட்டுல மந்திரியா இருக்கிற ஒருத்தருக்கு, மக்களுக்கு சேவை செய்யணும்கிறதுல இவ்வளவு ஆர்வமா?” என்று வியந்திருக்கிறார்.  

 

another one face of minister rajendarabalaji

 

அமைச்சர்களாக இருப்பவர்கள், அரசியல் தலைவர்களாக இருப்பவர்கள், கல்லூரிகளைக்  கட்டி, கல்வித் தந்தை ஆவதில்தான் பெரும் விருப்பமுடையவர்களாக இருப்பார்கள். பிற்காலத்தில் அரசியல் கைவிட்டாலும் கூட, கல்விக் கட்டணத்தின் மூலம் கிடைக்கும் பெரும் தொகை, தங்களது தலைமுறையினரைக் காப்பாற்றிவிடும் என்பது அவர்களின் திட்டமாக இருக்கும். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் கட்டுமானம் ஒன்றை எழுப்பி வருகிறார். அது கல்லூரி அல்ல, கோவில். தனது சொந்த முயற்சியில் அந்தக் கோவிலைக் கட்டி வருகிறார். இன்னும் எத்தனை காலத்துக்கு அரசியல் சரியாக வரும்? என்று தனக்குள்ளே கேள்வி எழுப்பி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையான ஆன்மிகப் பணிக்கு, தன்னை அவர் தயார்ப்படுத்தி வருவதாகச் சொல்கிறார்கள், அவரது ஆதரவாளர்கள்.

தமிழகத்திலுள்ள எத்தனை அமைச்சர்கள், ‘நான் விலையுயர்ந்த காரில் செல்கிறேன். என்னுடைய  மாவட்டத்தில், ஆரம்பத்திலிருந்து   நான் பேசிப்பழகிய  கட்சிக்காரர்கள், கட்சி நிர்வாகிகள்  டூ வீலர் வாங்கக்கூட வசதியில்லாமல் சைக்கிளில் வருகிறார்களே..’ என்று சிந்தித்திருப்பார்கள். கே.டி.ராஜேந்திரபாலாஜியின் மனதில் அப்படி ஒரு கவலை ஏற்பட, விருதுநகர் மாவட்டம் முழுவதும், அதிமுகவினர் பலருக்கும் ‘ஆக்டிவா’ வாகனம் வாங்கித் தந்தார்.

 

another one face of minister rajendarabalaji

 

சிவகாசியில் ரேடியோவும் கையுமாக சுற்றித் திரிவார் ஒருவர். அவரை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். அவருக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி ஏதோ உதவி செய்திருக்கிறார். உடனே அந்த நபர் பிரபலமான தனியார் சேனல் ஒன்றில் “கே.டி.ராஜேந்திரபாலாஜி ஒரு வள்ளல். எம்.ஜி.ஆர். ஆவி  இவருக்குள் புகுந்துவிட்டது. அதனால்தான், அந்த வள்ளல் குணம் இவருக்கும் வந்துவிட்டது.” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசி,  அது ஒளிபரப்பாகிவிட, அவரை அழைத்த கே.டி.ராஜேந்திரபாலாஜி “ஏம்பா.. நீ சும்மா இருக்க மாட்டியா? புரட்சித்தலைவர் எங்கே? நான் எங்கே? இனிமேல் அப்படி பேசாத.” என்று கண்டித்திருக்கிறார்.

‘கே.டி.ராஜேந்திரபாலாஜி ரொம்ப நல்லவர்’ என்று அவரது அருமை பெருமைகளை எதற்காக இங்கே பட்டியலிட வேண்டியிருக்கிறது என்றால், ஸ்ரீவில்லிபுத்தூர் – மதுரை மெயின் ரோட்டில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள, இருவர் காயம் அடைந்தனர். அந்த வழியாக காரில் சென்ற கே.டி.ராஜேந்திரபாலாஜி விபத்தைப் பார்த்துவிட்டார். உடனே காரிலிருந்து இறங்கி,  அவரே துண்டை எடுத்துக் கொடுத்து  “ரத்தம் கொட்டுதுப்பா..  உடனே ஜி.எச்.சுக்கு கூட்டிட்டுப் போங்க.. நீங்க வச்சிருக்கிற பொருளெல்லாம் பத்திரமா இருக்கு. லேட் பண்ணாம கிளம்புங்க..: என்று காவல்துறையினரையும் துரிதப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
 

அய்யன் திருவள்ளுவர் குறள் வாயிலாகச் சொல்கிறார் –
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

இதன் பொருள் – அன்பே உயிர்! அன்பின் வழியாகத்தான் உயிர் உடம்பில் நிலைத்திருக்கிறது. அன்பில்லாதவர்கள் எலும்பைத் தோலால் போர்த்திய வெறும் உடம்பைக் கொண்டவர்களே! அதாவது, அன்பில்லாதவன், உயிர் இருந்தும் இல்லாதவன் ஆவான்!

ஆதலினால், அன்பு காட்டுவோம்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.