Skip to main content

அரசால் மூடப்பட்ட மற்றொரு அரசுப் பள்ளி;போராடி திறந்த பொதுமக்கள்!

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

தமிழ்நாட்டில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததாக கூறி 46 அரசுப்பள்ளிகளை மூடி அதில் நூலகம் திறக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஆவுடையார்கோயில் ஒன்றியத்தில் உள்ள சின்னபட்டமங்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளும் மூடப்பட்டு நூலகம் தொடங்கும் பணி நடந்துவந்தது.

இந்நிலையில் கடந்த 9 ந் தேதி குளத்தூர் மக்களை சந்தித்து பள்ளியை திறக்க மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று கிராம மக்களிடம் நீண்ட நேரம் நாம் பத்திரிகை நண்பர்கள் பேசியதால் உடனடியாக கிராம கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி 13 ந் தேதி 11 குழந்தைகளுடன் மூடிய பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. அன்றே மற்றொரு பள்ளியான சின்னபட்டமங்களம் கிராமத்திற்கு சென்று அப்பகுதி பெண்கள் மற்று கிராம தலைவர் உள்ளிட்ட பொதுமக்களிடம் அரசுப் பள்ளியின் முக்கியத்துவம் குறித்து நாம் பேசிய நிலையில் ஆசிரியர் பள்ளிக்கு வருவதில்லை, மாணவர்களை சேர்க்க மறுத்தார் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். 

தொடர்ந்து அந்த குறைகளை அதிகாரிகள் சரி செய்வார்கள் என்று நம்பிக்கையாக பேசியதால் உடனடியாக கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி வட்டார கல்வி அலுவலருக்கு கொடுத்தனர். இந்தநிலையில் இன்று 10 குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள் பள்ளி உள்ளூர் ஆசிரியைகளைக் கொண்டு பாடம் நடத்த தொடங்கினார்கள். இந்த தகவல் அறிந்து வந்த ஆவுடையார்கோயில் வட்டார கல்வி அலுவலர் லதா பேபி பெற்றோர்களிடம் மாணவர்களின் வயதை கேட்டறிந்த பிறகு மீண்டும பள்ளி தொடர்ந்து இயக்கப்படும் என்று சொன்னதுடன் அருகில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் இளையபெருமாளை தற்காலிக ஆசிரியராக நியமித்து வகுப்புகளை நடத்த உத்தரவிட்டார். 

இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசால் மூடப்பட்ட பள்ளிகள் இல்லை என்ற நிலை உருவானது. இந்தநிலையில் சின்னப்பட்டமங்களம் பள்ளிக்கு சரியாக வராமல் பள்ளியை மூட காரணமாக இருந்த ஆசிரியரை கல்வித்துறை பணியிடைநீக்கம் செய்துள்ளனர். இதேபோல மற்ற 44 பள்ளிகளையும் திறக்க உள்ளூர் இளைஞர்களும் கிராம மக்களும் முயன்றால் மூடிய பள்ளிகளை மீண்டும் திறக்கலாம்.

பத்திரிகை நண்பர்களின் தொடர் முயற்சியால் பள்ளிகள் திறக்கப்பட்டதில் ஆசிரியர்களும் பாராட்டினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.