ADVERTISEMENT

நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் காணாமல்போன மற்றொரு மீனவர் சடலம் கரை ஒதுங்கியது!

03:30 PM Sep 09, 2019 | kalaimohan

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் செந்தில் மற்றும் மதனுக்கு படகு வாங்க 10 மீனவர்கள் கடந்த 2 ந் தேதி கடலூருக்குச் சென்று நவீன நாட்டுப் படகு வாங்கி அதிலேயே 10 பேரும் ராமேஸ்வரம் நோக்கி சென்றபோது முத்துப்பேட்டைக்கு தெற்கே கடல்காற்று அதிகமாக படகு மூழ்கி 10 பேரும் 3 டீசல் கேன்களை பிடித்துக் கொண்டு தவித்துள்ளனர்.

காற்று அதிகமாக உள்ளதால் மீனவர்களும் கடலுக்குச் செல்லாததால் 10 மினவர்களும் உயிருக்கு போராடியுள்ளனர். அதில் இருவர் நீந்திச்சென்று அந்த வழியாகச் சென்ற படகில் ஏறி மல்லிபட்டினம் வந்து தகவல் கொடுத்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அதன்பிறகே படகு கவிழ்ந்த தகவல் தெரிய வந்தது. கடலோர காவல், மற்றும் மத்திய மீட்புக்குழுவினர் தேடினார்கள். இந்தநிலையில் 5 ந் தேதி டீசல் கேன்களின் உதவியுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படனர்.

கடல் காற்று அதிகமாக இருந்ததில் மற்ற 4 மீனவர்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் 7 ந் தேதி முத்துப்பேட்டை அருகே 2 மீனவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியது. அந்த சடலங்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதேபோல 8 ந் தேதி அதேபகுதியில் கரை ஒதுங்கியது மிகவும் மோசமாக இருந்ததால் மல்லிபட்டினம் துறைமுகம் கொண்டுவரப்பட்டு கடல்கரையிலேயே பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.


இந்தநிலையில் மற்றொரு மீனவரை தேடும் பணி நடந்துவந்தது. இன்று தம்பிக்கோட்டை மறவக்காடு கடல் முகத்துவாரத்தில் தேடப்பட்டு வந்த மீனவர் இலங்கேஸ்வரன் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அந்த சடலத்தை மீட்டு வர கடல் காற்று அதிகமாக இருப்பதால் அருகில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மீனவர்களை பார்த்து ஆறுதல் சொன்ன நடிகர் பரதன் இலங்கேஸ்வரன் சடலம் கிடந்த பகுதிக்கு செல்ல முயன்றார். ஆனால் காற்று அதிகமாக இருந்ததால் செல்ல முடியவில்லை. அதனால் இறந்த மீனவர்கள் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் சிகிச்சையில் உள்ள மீனவர்களுக்கும் நிவாரணம் வழங்குவதுடன் மூழ்கிய படகுக்கு பதிலாக மாற்று படகு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT